Headlines

வாகரை காரமுனை கிராமத்துக்கு பஸ் சேவை ஆரம்பம்!

-முர்ஷித் கல்குடா- இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையினால் மட்டக்களப்பு தொடக்கம் மீள்குடியேற்ற கிரமமான வாகரை காரமுனை வரையான பஸ் சேவை கடந்த  வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் மீள்குடியேற்ற கிரமமான காரமுனை மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், வாழைச்சேனை சாலை முகாமையாளருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய குறித்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.   வாழைச்சேனை பேரூந்து சாலையின் முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற…

Read More

“வெற்றிகளுக்கு தோல்வி தூணாகட்டும்” முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன்!

கடந்த பொதுத்தேர்தல்களுக்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களிடையே அமைச்சர் றிஷாட் பதியுதீனைப் பற்றி ஒரு நல்லபிப்பிராயம் வளரத் தொடங்கிற்று. 90ல் இனச்சுத்திகரிப்பின் பேரில் அகதிகளாக்கப்பட்ட வடமாகாணத்தின் முஸ்லிம்களின் நிலை பற்றி நெஞ்சு பதறாத முஸ்லிம்களே இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம், வடமாகாண முஸ்லிம்கள் மீதான அநுதாபமும் அக்கறையும் மனதை சதா உறுத்திக்கொண்டே இருந்தது. அதேபோன்ற அநியாயங்கள், அக்கிரமங்கள் தொடர்பாக அரைகுறையான அவஸ்தைகளை அவர்களும் அநுபவித்திருந்தார்கள். வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்கு விரைவில் விடிவு ஏற்படவேண்டுமென்ற பிரார்த்தனை, அவர்களின் நெஞ்சில்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வு! செயலாளர் சுபைர்தீன் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் மல்வானை அமைப்பாளர் முஹம்மத் ரிபானின் முயற்சியில் யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், மல்வானை விதானகொடை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலையை (Mini Garment) மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் நேற்று முன்தினம் (20) திறந்து வைத்தார்.   சுமார் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வில், அகில இலங்கை…

Read More

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்” பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XIIஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உபபிரிவின் மீளமைக்கப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம், அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றவென வழங்கப்பட்ட விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டுமென அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த அமைச்சின் செயலாளரை வேண்டியுள்ளார். முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிகிழமைகளில், தமது மதக் கடமைகளை அனுஷ்டிக்கும் வகையில் 12.00…

Read More

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் அரவணைப்புடனும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இம்முறை கைப்பற்றுவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று மாலை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்தக்…

Read More

உள்ளூராட்சித் தேர்தல் படிப்பினையைக் கொண்டு மாகாணத் தேர்தல் முறைமையை மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.. ஸ்திரமான ஆட்சிக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்கும் – அமைச்சர் ரிஷாட்  

  உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையிலான தேர்தல்களை நாடாத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாகவும், எதிர்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டுமென அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை…

Read More

புதுக்குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

மன்னார் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் எஸ்.எம்.எம்.முஜாஹிர், புதுக்குடியிருப்பு வட்டார மக்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்! உலமாக்களே, புத்திஜீவிகளே, ஆசிரியர்களே, பள்ளி பரிபாலன சபைத் தலைவர்களே, நிர்வாக உறுப்பினர்களே, கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மகளிர் சங்கம், இளைஞர் அமைப்பு, விளையாட்டுக் கழகம் மற்றும் மீனவர் சங்கத் தலைவர்களே, நிர்வாக உறுப்பினர்களே, அரச ஊழியர்களே, உறவுக்காரர்களே, முதியவர்களே, தாய்மார்களே, தந்தையர்களே,…

Read More

க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

முஸ்லிம் கல்வி முன்னேற்றக் கழகம் 10ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 9 ஏ (A) சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) கொழும்பு, நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவரும், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான அகமத் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்…

Read More

புத்தளம் அல்காசிமி சிட்டி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

புத்தளம், அல்காசிமி சிட்டி, மன்/ புத்/ ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எம்.நஜ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மற்றும் கோட்டக்…

Read More

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முண்ணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து, அதன் மூலம் அந்த மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 ஆசனங்களைப் பெற்றுத்தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர் ஐ.எஸ்.மொஹிடீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் 03 ஆசனங்களையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 04 ஆசனங்களையும், துணுக்காய் பிரதேச…

Read More

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம் காங்கிரஸும் வாக்குகளும் ஆசனங்களும்!

கடந்த 10 ஆம் திகதி  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை  மாவட்ட முஸ்லிம்வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்துள்ள  வாக்குகளின் அடிப்படையில்  அமைச்சர்  ரவூப் ஹக்கீம்  தலைமையிலான  முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து  காணப்படும் நிலையில் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தலைமையிலான  அகில  இலங்கை  மக்கள் காங்கிரஸின்  வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளதை  அவதானிக்க  முடிகின்றது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் 10 உள்ளூராட்சி சபைகளில் 9 சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், காரைதீவு பிரதேச சபையில் மரச் சின்னத்திலும் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், மொத்தமாக 66, 563 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் இக்கட்சிக்கு 55…

Read More

மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த மகளிரணியை பாராட்டுகின்றார் டாக்டர்.ஹஸ்மியா!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தோ்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக என்னோடு தோழோடு தோழ் நின்று பாடுபட்ட மக்கள் காங்கிரஸின் மகளிரணி அமைப்பாளர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தொிவிக்கின்றேன். அத்துடன், எமது கட்சியின் வெற்றிக்காக எமது பெண்கள் பல பிரதேசங்களில் நோன்பு நோற்று பிராா்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தொிவிக்கின்றேன். டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிரணி தேசியத் தலைவி

Read More