Headlines

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற 69 வது சுதந்திர தின விழா

69 வது சுதந்திர தின விழா மிக விமர்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ் அணி நடை வகுப்பு ,விசேட அதிரடிப் படை அணி நடை வகுப்பு, மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் அணி நடை வகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Read More

ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானியயா ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானிய ஜும்மாப் பள்ளி மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Read More

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம்

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய த்திற்கு கடந்த 02.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம் செய்தார். வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் தேவநாயகம் அவர்களின் வேண்டுக்கினங்க கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பாடசாலைக்கு சென்று அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து எதிர்காலத்தில் என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்து தருவதாக குறிப்பிட்டார். இவ்விஜயத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம சேவையாளர் அருள் ராஜ், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து…

Read More

ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கு பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் நிதி வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கான கட்டட நிர்மாணப்பணிகளிற்காக அண்மையில்  ஐந்து இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது.

Read More

புத்தளம் வேப்பமடு அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

புத்தளம் வேப்பமடு அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம்  (3)  கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

சிறைகளில் வாடிக்கிடக்கும் தமிழ் இளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க பேதமின்றி அணி திரள்வோம் முல்லைத்தீவு சுதந்திர தின விழாவில் றிஷாட் அறை கூவல்!!1

சுஐப் எம் காசிம். இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில,; அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது சின்னஞ்சிறிய அழகான இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது…

Read More

முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (4) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ், இராணுவம், கடற்படை, வான் படைகளும் அவற்றின் உயர் அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்ட உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள்…

Read More

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு!!!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கலந்துரையாடினார். மேலும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சந்திப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று 03.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சரின் ஓட்டமாவடி காரியாலயத்தில் இடம்பெற்றது கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தனது அமைச்சினால் முன்னேடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் எதிர்காலத்தில் முன்னேடுக்கப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயற்திட்டங்களை தயாரித்து தனக்கு சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் கேட்டு…

Read More

அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டி நேரிடுமென அறிவிப்பு

சுஐப் எம் காசிம் அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும் அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும்  அமைச்சர் மேலும் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற (2017.01.03) தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினராக அவர்…

Read More

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு

வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 02.02.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் பிரதி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின்…

Read More

வில்பத்து விரிவாக்கம் மீண்டும் ஓர் இனச் சுத்திகரிப்பு

-எம்.ஏ.ஹபீழ் ஸலபி – அண்மைக்காலமாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் விவாதப்  பொருளாகியுள்ள இந்த விவகாரம் ஜனாதிபதியின் வில்பத்து விரிவாக்கல் அறிவிப்புடன் இனவாத அரசியல் சதுரங்கத்தில் விசனங்களையும் விமர்சினங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 1990 ஒக்டோபர் திங்கள் இறுதிப் பகுதியில் புலிகளால் இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட வடக்கின் முசலிப் பிரதேச  முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாக தென்னிலங்கை பேரினவாத இயக்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இது தொடர்பாக எதிரும் புதிருமான…

Read More