Headlines

வாக்குகளை மையமாக கொண்டு மக்கள் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை… அம்பாறை முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் றிஷாட்.

சுஐப்.எம்.காசிம்.   வாக்குகளை எதிர்பார்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் மக்களின் நலனை மையமாக வைத்தே  தமது கட்சி பணிபுரிந்து வருவதாகவும் அக்கட்சியின் தலைவர்- அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெளிவு படக்கூறினார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில்  தேர்தல் தொகுதிகளின் கட்சியின் முக்கியஸ்தர்கள் , ஆதரவாளர்களுடனான சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கலந்துகொண்டு  உரையாற்றினார் கட்சியின் தவிசாளர் ,பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட…

Read More

ஒரு இலட்சம் மெட்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

-அமைச்சரின் ஊடகப்பிரிவு அரிசித்தட்டுப்பாடு எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை வழங்குயுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் அரிசியானது  களஞ்சியப்படுத்தப்பட்டு தேவையேற்படும்பட்சத்திலே சந்தைக்கு விடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் புத்தாண்டில் எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவி;த்த அமைச்சர், பாவனையாளர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் பொருட்களின் விலைகளை எழுந்தமானமாக கூட்டி விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்….

Read More

“சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இறக்குமதியை குறைப்போம்” பெல்வத்த கரும்பு அறுவடை விழாவில் அமைச்சர் றிஷாத்

-சுஐப் காசிம்- நாட்டின் கரும்புச்செய்கையில் தன்னிறைவுபெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள கரும்பினை அறுவடை செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) காலை 7 மணியளவில்இடம்பெற்றது. அமைச்சர் றிஷாத் கரும்பு அறுவடையினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார். லங்கா சீனிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நவீன் அதிகார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, ஊவா மாகாண சபை உறுப்பினர் தர்மசேன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பௌசர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதே எமது…

Read More

வாழைச்சேனை  206 பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா 

நேற்று 01.03.2017 ஆம் திகதி நியுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஜெளபர்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது. தையல் பயிற்சி முடிவில் தையல்  இயந்திரம் தங்களுக்கு வழங்கப்படும்  அதனை பயன்படுத்தி தங்களின் குடும்ப வருமானத்தை  உயர்த்தி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதி…

Read More

வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் குறித்து பிரதியமைச்சர் அமீர் அலி

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் சாதகமான முடிவினை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அறிவிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில்லா பட்டதாரிகளை இன்று(1.3.2017) புதன்கிழமை பிற்பகள் சந்தித்த போது அவர்களிடம் மேற்கண்டவாறு பிரதியமைச்சர் அமீர் அலி கூறினார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிய கோரிக்கை கடிதத்தினையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளிடம்…

Read More

பிறைந்துறைச்சேனை தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை 206A பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 01.03.2017 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நளீம்   தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய…

Read More

மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலை திறப்பு விழா

-A.R.A.றஹீம் – மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலை நேற்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாணசபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான  றிப்கான் பதியுதீன் அவர்களினால்  திறந்து வைக்கப்பட்டது அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஜப்பான் , மற்றும்  யு என் ஹெபிடேட் நிறுவனத்தினால் 4,200,000 டொலர்கள் பெறுமதியான தொகையில் இப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது சுகாதார வசதிகள் அனைத்தும் கொண்டு நவீன…

Read More

கண்டி பொல்கொல்லையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் றிஷாட்

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையின் ஜனாதிபதி விருது (2015/2016) கண்டி பொல்கொல்லையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன கௌரவ விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதி அமைச்சர் சம்பிக, பிரேமதாஷ மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக ஆகியோரும் கலந்துகொண்டனர் பேரவையின் தலைவி ஹேஷானி போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர், அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றினர்.

Read More

புறக்கோட்டை சந்தையில் திடீர் சுற்றிவளைப்பில் 42150 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டது

-அமைச்சின் ஊடகப் பிரிவு கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போது  17150 கிலோ கிராம் (25*686 பைகள்) அரிசியை மொத்த வியாபார நிலையமொன்றிலும்,  23,050 கிலோ கிராம் அரிசியை (25*922 பைகள்) இன்னுமொரு வியாபார நிலையத்திலும் 1900 கிலோ கிராம் (25*76 பைகள்) அரிசியை இன்னுமொரு வியாபார நியைத்திலும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 17150 கிலோ…

Read More

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் : அமைச்சர் றிஷாட்

-அமைச்சின் ஊடகப்பிரிவு – வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தி;யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம்.பைசர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக சாளம்பைக்குளப் பிரதேசம் இன ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. தமிழ் முஸ்லிம் உறவுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இந்தக்…

Read More

“வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தீர்க்கப்படும்” அமீரலியிடம் பிரதமர் உறுதி

-எஸ்.முர்சித் – மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற் கொண்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வெகுவிரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரதியமைச்சர் அமீர் அலியிடம் பிரதமர் ரணீல் விக்ரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று (27.02.2017) மீண்டும் சந்தித்துப் பேசிய பிரதியமைச்சர் அமீர் அலி இந்த மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவு படுத்தினார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 4500 பட்டதாரிகள்…

Read More

காப்பெட் பாதையாக மாற்றமடையும் குவைத் வைத்திசாலை வீதி: அ.இ.ம.கா.வின் அபிவிருத்திப் பணி

குவைத் வைத்திசாலை வீதி (Kuwait Hospital Road) காப்பெட் பாதையாக புனர்நிர்மானம்  செய்யும் பணிகள் நேற்று (2017-02-27)  நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களும், அலி சப்ரி ரஹீம் அவர்களும் கலந்துகொண்டனர்.

Read More