வாக்குகளை மையமாக கொண்டு மக்கள் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை… அம்பாறை முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் றிஷாட்.
சுஐப்.எம்.காசிம். வாக்குகளை எதிர்பார்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் மக்களின் நலனை மையமாக வைத்தே தமது கட்சி பணிபுரிந்து வருவதாகவும் அக்கட்சியின் தலைவர்- அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெளிவு படக்கூறினார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளின் கட்சியின் முக்கியஸ்தர்கள் , ஆதரவாளர்களுடனான சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார் கட்சியின் தவிசாளர் ,பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட…
