Headlines

1AC பாடசாலை 1AB பாடசாலையாக தரம் உயர்த்தம்

மன்னார் தாராபுரம் அல் மினா பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் முயட்சியினால் 1 பாடசாலையாக காணப்பட்ட தாராபுரம் அல் மினா பாடசாலையானது 1 பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது அதுமட்டுமல்லாமல் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித துறையினை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் வெளி மாவட்டங்களில் சென்று படித்துவரும் சந்தர்ப்பத்தில் தற்போது விஞ்ஞான, கணித துறையும் இந்த பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது…

Read More

ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்ப்பது, மடத்தனமான செயல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ஆசைபட்டால் ஜனாதிபதியும் அதே வரிசையில் அமர நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்க்க நினைப்பது இந்த நல்லாட்சி அரசின் மடத்தனமான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முசலி விவகாரத்தினால் எழுந்துள்ள முரண்பாடு தொடர்பில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார். இது…

Read More

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

சுஐப் எம் காசிம் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு கையளிக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் தொடர்பில் அடுத்த அமைச்சரவையில்  இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். நேற்று (04) அமைச்சரவை கூடிய போது இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் சுற்றுச்சூழல் அறிக்கையின் காலதாமதம் காரணமாக அடுத்த அமைச்சரவையில் இதற்கான…

Read More

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ எச் எம் பௌசி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனைக் கூட்டத்தில் பேசிய பலர் வில்பத்துப் பிரதேச பிரகடனம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டினை விமர்சித்துப் பேசியதனை தொலைக்கட்சியில்…

Read More

புறகோட்டையில் முகக்கிறீம் கடைகள் இரண்டு சீல் வைப்பு

-அமைச்சின் ஊடகப்பிரிவு புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று காலை (03) கைப்பற்றினர். இந்த கிறீம்களை கொண்டிருந்த டியுப்களில் விலைகளோ, காலாவதியாகும் திகதியோ, உற்பத்தி செய்யப்பட்ட திகதியோ, வியாபார பதிவிலக்கமோ குறிப்பிடப்படாது அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததனாலேயே அதிகாரசபை அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியதாக தெரிவித்தனர். ஒரு வர்த்தக நிலையத்தில் 2500 கிறீம் டியுப்களும் இன்னொரு வர்த்தக…

Read More

சொந்த இடத்துக்கான போராட்டத்தில் ஈடுபடும் முள்ளிக்குள மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும் என கோரி அந்த பிரதேச மக்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, அகில மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (01) சந்தித்து நிலமைகளை கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது முன்னால் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னனியின் தலைவருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம்,…

Read More

எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை. மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

சுஐப் எம் காசிம் முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்து, மக்களின் உண்மையான போராட்டத்தை மலினப்படுத்துவதற்கு துணை போகின்றார்கள் என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னர் மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (01) மாலை சந்தித்த பின்னர் அமைச்சர் அங்கு உரையாற்றினார். அமைச்சர் மேலும்…

Read More

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் சாதகமான நடவடிக்கை ஜனாதிபதி செயலக உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

சுஐப் எம் காசிம் வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான, தீர்க்கமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி பி அபேகோன் இன்று (31) மாலை உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய பின்னர், அவர்…

Read More

பழுதடைந்த 20 இலட்சம் பெறுமதியான கட்டாக் கருவாடு புறக்கோட்டையில் பறிமுதல்

-ஊடகப்பிரிவு பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நோக்கில் புறக்கோட்டையில் பாரிய குளிரூட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 2000 கிலோ கட்டாக் கருவாட்டினை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றியதோடு அந்த விற்பனை நிலையத்தினையும் சீல் வைத்து மூடினர். வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கருவாடு ரூபா 20 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியானதென நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த இந்தக் கருவாட்டினை பண்டிகைக் காலத்தில் துண்டு துண்டாக வெட்டி பொதி செய்து…

Read More

முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினையை முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினையை முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; “கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது சிங்கள பேரின சக்திகளினால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தவறியதன் காரணமாகவே அவரை ஆட்சியில்…

Read More

வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் நாளை உயர்மட்டக் கூட்டம், ஜனாதிபதி உறுதியளித்ததாக அஸாத் சாலி அறிவிப்பு

சுஐப் எம் காசிம் வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று (30) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். ”முசலி மக்களுக்கு இடம்பெற்றுள்ள அநியாயங்களை ஜனாதிபதியிடம் நான் விரிவாக எடுத்துரைத்தேன். அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மிகவும் காட்டமாக எடுத்துரைத்துள்ளார். வட மாகாண மக்களின்…

Read More

பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் அழுத்தம்

சுஐப் எம் காசிம் முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமெனவும் இல்லாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரியப் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டி நேரிடுமெனவும் “உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் சிவில் சமூகக் கூட்டமைப்பு” அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொழும்பு ரமதா ஹோட்டலில் இந்தக் கூட்டமைப்பு இன்று (30) மாலை ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்ற சிவில் சமூகக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், புதிய…

Read More