முசலிப் மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முடக்கும் நல்லாட்சியின் புதிய வர்த்தமானி பிரகடனம்
சுஐப் எம் காசிம் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும் தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த முசலி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புதிய வர்த்தமானி பிரகடனம் அவர்களின் சுயாதீன நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. ‘வில்பத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள்;, இயற்கை வளங்களை நாசமாக்குகின்றார்கள்’; என்ற இனவாதிகளினதும் இனவாதச் சூழலியலாளர்களினதும் இனவாத ஊடகங்களினதும் காட்டுக்கூச்சல்களையும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் கருத்திற்கெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால…
