Headlines

சர்வதேச வர்த்தக உடன்பாடு தொடர்பிலான செயலமர்வில் அமைச்சர் ரிஷாட் முக்கிய உரை……

ஊடகப்பிரிவு 2013 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட “வர்த்தக வசதிகள் உடன்பாடு” தொடர்பில் இலங்கை ஏற்றுமதி வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுச் செயலமர்வு நாளை (26) கொழும்பு சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. முதல் நாள் அமர்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றவுள்ளார். இந்த செயலமர்வை ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் வர்த்தகத்திற்கான உலகளாவியக் கூட்டு (Global Alliance For Trade in Geneva) மற்றும் கொழும்பில் இயங்கும்…

Read More

பூகோள மெட்ரிட் நெறிமுறைக்குள் இலங்கையின் உட்பிரவேசம்..

– அமைச்சின் ஊடகப்பிரிவு ஆசிய, மற்றும் அவற்றின் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 நாடுகளை உள்ளடக்கிய G15 பூகோள குழுமத்தின் இலங்கையுடனான நேரடியான முதல் பங்குடமையானது நேற்று (24) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த அமர்வானது 2016ம் ஆண்டில் அல்ஜீரியாவில் நடைபெற்ற G15 மாநாட்டின் பாரம்பரிய மற்றும் பாரம்பரிய கலாசாரத்தின் மீதான அறிவுசார் சொத்து உரிமை அமர்வின் தொடர்ச்சியாகும். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை அதன்…

Read More

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மூலம் வேலைத்திட்டங்கள்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கி வலையமைப்பு ஆகியன இணைந்து நாடுபூராகவும் 1074 புதுவருட கொண்டாட்டங்கள். அநுராதபுரம் மாவட்டம் ஹொரவபொதான பிரதேச செயலகத்தின் கபுகொல்லாவா சமுர்த்தி வங்கிக் கிளையின் புதுவருட கொண்டாட்டங்கள் அ/ ஆணவிழுந்தாவ முஸ்லிம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சமுகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.

Read More

எங்களிடமிருந்து சென்றவர்கள் எங்களை ஏமாற்றியதாக நினைக்கிறார்கள்: ஏமாந்தது நாங்களல்ல-பிரதியமைச்சர் அமீர் அலி

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்றுப்பற்று ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் மீராவோடை கிழக்கிற்கான தையல் பயிற்சி நிலையம் இன்று 23.04.2017 ம் திகதி மீராவோடை மதீனா வீதியில் பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் அமீர் அலி, அரசியலும் அதிகாரங்களும் இறையவன் வழங்கிய விடயம். அவன் அதிகாரங்களை தந்தால் நாங்கள் இந்த சமூகத்திற்கும், பிரதேசத்திற்கும் நல்ல விடயங்களைச் சிறப்பாகச் செய்வோம். அவன் தராதர காலத்திலும் நாங்கள் அவனின் உதவியோடு இந்த…

Read More

முஸ்லிம்களுக்கென பலமான ஊடகம் ஒன்று தேவைப்படுகின்றது நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட்

– ஊடகப்பிரிவு முஸ்லிம்களுக்கென தனியான, ஒரு பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தனவந்தர்கள் இதற்கு உதவ முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதிய ’சமூகமே பதில் சொல்’, ‘இருதீபங்கள்’ ஆகிய  நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் நாடுகள்…

Read More

மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய மத்ரசாக்களின் வளர்ச்சி வழிகோலியுள்ளன. திவுரும்பொல பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்

-அமைச்சின் ஊடகப்பிரிவு மத்ரசாக்களின் வளர்ச்சியும் ஹாபிழ்கள், உலமாக்கள் மற்றும் மௌலவிமார்களின் பெருமளவான உருவாக்கமுமே முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்களில் இஸ்லாமிய விழுமியங்களை வலுப்படுத்தவும் மூட நம்பிக்கைகள் அருகிப் போகவும் பெரிதும் வழிவகுத்தன. அந்நிய கலாசாரங்களுடனும் பழக்க வழக்கங்களுடனும் ஒட்டி வாழ்ந்த சில முஸ்லிம் கிராமங்களில் இஸ்லாமிய வாழ்வு தழைத்தோங்கவும் இவை உதவி இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திவுரும்பொல ஜாமியா மனாருல் ஹுதா அரபுக்கலாசாலையின் 16வது பட்டமளிப்பு விழாவில் பிரதம…

Read More

வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு புதிய திருப்புமுனை!

இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு இதுவரை வழங்கப்படாத இணையற்ற சலுகைகளுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தடையற்ற துறைமுகங்களில் ஒன்றான சோஹாரின் சக்திவாய்ந்த வளைகுடா ஒத்துழைப்பு சபை அதன் கதவுகளை திறந்துள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஒரு புதிய திருப்புமுனையாகும்.   உலக மற்றும் வரலாற்று பிரசித்திபெற்ற சிலோன் தேயிலை மற்றும் இலங்கையின் ஏனைய உற்பத்திகளினை கொண்டு  உடனடி பயனாளிகளாக முன்வாருங்கள் என  ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சின் அரச விவகாரங்களுக்கான தற்காலிக துணைச்செயலாளர்…

Read More

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும்

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்தி்ப்பொன்று இடம் பெற்றுள்ளது. வியாட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்தி்ப்பு ஹனோயில் அமைந்துள்ள ஹோட்டல் மிலீயாவில் இடம் பெற்றது. குறி்ப்பாக சீனா அரசாங்கம் இலங்கையுடன் மிக நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும்,எதிர்காலத்தில் கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு…

Read More

வியட்நாம் ஹனேயில் கூட்டுறவு துறையாளர்களின் உற்பத்திகளை கொண்ட வர்த்தக சந்தையின் நிகழ்வு

வியட்நாமின் ????????தலைநகரான ஹனேயில் இடம் பெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டுக்கு சமாந்தரமாக முதன் முறையாக கூட்டுறவு துறையாளர்களின் உற்பத்திகளை கொண்ட வர்த்தக சந்தையின் நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெறும் 21 ஆம் திகதி வரை இந்த வர்த்தக சந்தை இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த வர்த்தக கண்காட்சி வளவில் சுமார் 300 விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுன்,பல்வேறு உற்பத்தி பொருட்களை இங்கு காணக்கூடியதாக…

Read More

வனபரிபாலன திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட 2012/2017ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல்களை இரத்துச்செய்யக்கோரி கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள், கொழும்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று மாலை (18-04-2017)முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

வனபரிபாலன திணைக்களத்தினால்  கையகப்படுத்தப்பட்ட 2012/2017ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல்களை இரத்துச்செய்யக்கோரி கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள்,  கொழும்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று மாலை (18-04-2017)முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தங்களுக்குத்தெரியாமல் 2012ம் ஆண்டு வனபரிபாலன திணைக்களத்துக்கு தமது காணிகளை சுவீகரித்துள்ளதாகவும், 2017ம் ஆண்டு கால அவகாசம் வழங்காமல் தமது பூர்வீக காணிகளை வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமாக்கி ஜனாதிபதியினால் செய்யப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச்செய்யக்கோரி ஊர் மக்கள் சார்பாக இந்த…

Read More

வியட்னாம் ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் றிசாத்

ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10வது மாநாடு  இன்று வியட்நாம் ஹனோயில் இடம்பெறுகின்றது, சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 300க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று 18ம் திகதி முதல் 21ந் திகதி வரை இம்மாநாடு இடம்பெறும். குறிப்பாக கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறையை புதிய யுகம் படைக்கும் என்ற தொணிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சர்வதேச…

Read More

21 வது நாளாக தொடரும் மறிச்சுக்கட்டி பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க குருணாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் களத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட முக்கியஸ்தர் அசார்தீன் மொய்னுதீன் அவர்களினால் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மறிச்சுக்கட்டி மக்களின் இந்த சாத்வீக போராட்டம் தொடர்பில் குருணாகல் மாவட்ட பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்கு தெளிவு படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வதாகவும் தெரிவித்தனர். இப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மௌஜூத், களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹசீப் மரைக்கார்  ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More