Headlines

இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்…

கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று 15.05.2017ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது சமுர்த்தி , பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை , நட்டு வளர்ப்பு போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீநேசன்,மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Read More

புத்தளத்தின் பலவந்தமான சூழலியற் பாதிப்புகளுக்கு தொடர்ச்சியான பிரதிநிதித்துவம் இல்லாமையையே காரணம். கற்பிட்டியில் அமைச்சர் றிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்கு புத்தளத்தின் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் நீண்ட இடைவெளியே பிரதான காரணமென்று என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த கால சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளினாலேயே புத்தளம் மாவட்ட பாராளுமன்றக் கனவு சிதைந்து…

Read More

அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு அபுதாபி கொடைவள்ளல் மனிதாபிமான உதவி ஆரம்ப கட்டமாக 120 வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் வடமாகாண அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கென ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தரும் கொடைவள்ளலுமான மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் அல்ஹாஜ் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த அந்த கொடைவள்ளல் முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கு மீளக்குடியேறியுள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்தார். “ஆரம்பக் கட்டமாக இந்த…

Read More

இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை துரத்தி துரத்தி அடிக்கின்றன. பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு. வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ அத்தனை உச்சக்கட்டத் தடைகளையும் இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று (13) அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு சோதனைகளையும்…

Read More

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் ! ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு ஒரு வெட்டு முகப் பார்வை

சுஐப் எம்.காசிம் மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடாத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று மாலை (2017.05.08) தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது ஓர் ஆரோக்கியமான வெற்றியின் முதற்படிக்கல்லாகும். ஜனாதிபதியுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வர்த்தமானி பிரகடனத்தால் முசலி பிரதேச முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள…

Read More

கல்முனை வீடமைப்பு கிளைக் காரியாலயம் இடம்மாறாது. அமைச்சர் றிஷாட்டிடம் அமைச்சர் சஜித் நேரில் உறுதி

ஊடகப்பிரிவு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று (2017.05.09) காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த அவர்  இந்தக் கிளைக்காரியாலயத்தை இடமாற்ற மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அம்பாறை முஸ்லிம் பிரதேச மக்கள் கவலைகொண்டுள்ளதாகவும் இவ்வாறான நிலை ஏற்பட்டால் அந்தப் பிரதேச மக்களுக்கு காரியங்களை நிறைவேற்றுவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான சூல்நிலை உருவாகுமென்றும் அவர்…

Read More

வெசாக் காலத்தில் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமில்லை விலையை வேண்டுமென்றே அதிகரித்தால் சட்ட நடவடிக்கை அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

ஊடகப்பிரிவு வெசாக் பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எத்தகைய தட்டுப்பாடும் ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதே வேளை அத்தியாவசிய உணவுப்பண்டங்கள் இறக்குமதி மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹேமக்க பெர்னாண்டோ, சந்தையில் பொருட்கள் தாராளமாக இருப்பதாகவும் எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்தார். கடந்த வெசாக்…

Read More

பைசர், றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது

சுஐப் எம் காசிம் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை இன்று மாலை தற்காலிகமாக (08) இடை நிறுத்திக்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று காலை (07) நடாத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்; போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்களான றிஷாட்…

Read More

காணிப்பிரச்சினையே அனைத்து முரண்பாடுகளுக்கும் அடிப்படையான நிலையை வடக்கில் தோற்றுவித்துள்ளது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பிரச்ச்pனையேயென்றும் இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றதெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரிய கரிசலில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மாவாட்டத்தில் சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி, பெரியமடு, காக்கையன்குளம் விடத்தல்தீவு, சன்னார், தலைமன்னார் பியர், மற்றும் முல்லைத்தீவு…

Read More

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த மாநாடு ஜனாதிபதியின் செயலாளரினால் கூட்டப்படவுள்ளது. முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக உயர்மட்ட முஸ்லிம் தூதுக்குழு ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துரையாடிய போதே இத்தீர்மானம்…

Read More

அரசியல்வாதிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதையே சிவில் அமைப்புக்களில் சில தொழிலாக்கியுள்ளன. ரமழான் பரிசு மழை நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

சுஐப் எம் காசிம் முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவில் அமைப்புக்கள் பல, சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும் வேறு சில சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தாக்குவதையும், விமர்சிப்பதையுமே தனது முழு நேரத் தொழிலாகக் கொண்டியங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நவமணிப் பத்திரிகையும், ஜம் இய்யதுஷ் ஷபா நிறுவனமும் இணைந்து நடத்திய ரமழான் பரிசு மழைப் போட்டியின் பரிசளிப்பு விழா மருதானை ஜம் இய்யதுஷ்ஷபா மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக…

Read More

கம்பனி வரலாற்றில் புதிய கம்பனிகளின் பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைப்பு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 73% ஆல் குறைக்கப்பட்டிருக்கின்றதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கம்பனிப்பதிவு புதிய கட்டணங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, இந்தக் கட்டணக்குறைப்பு இலங்கையின் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கான முயற்சியாகும். 2016 ஆம் ஆண்டு நமது நாட்டில் 8289 புதிய கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டன….

Read More