Headlines

இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

Read More

வர்த்தக தின நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

நுகேகொட சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வர்த்தக தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்ட போது…

Read More

ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மாலை ஆசாத்சாலி உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்திய போதே, அவர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஆசாத்சாலி ஜனாதிபதிக்கு அனுப்பி…

Read More

ரோகிங்யோ அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சாகலவிடம் ரிஷாட் முறையீடு

கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த அவலைகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் சாகல ரட்நாயக்கவை இன்று (26.09.2017) காலை அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்கிசையில் இடம்பெற்ற…

Read More

வசிப்பதற்கு ஒரு  வீடு வாழ்வதற்கு ஒரு தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வாக்குறுதி 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின்  கீழ் 50 வீடுகள் முசலி பிரதேச சபைக்குட்பட்ட  அகத்திமுறிப்பு அளக்கட்டு  கிராமத்திற்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் “வசிப்பதற்கு ஒரு  வீடு வாழ்வதற்கு ஒரு தொழில்” என்னும் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது யுத்த நிறைவின் பின்னர் தமது சொந்த கிராமங்களுக்கு மீள்  குடியேறிவரும் மக்களை அழகான முறையில் குடியமர்த்த வேண்டும் என்பதற்காக இவ் வீடுகள் நேற்றைய தினம்…

Read More

அமீர் அலி முயற்சியில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்லில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு தையல் இயந்திரம், மண்வெட்டி, மருந்து விசுரும் கருவி, மேட்டு நில பயிர்செய்கைக்காக சோளன் கச்சான் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் நானூறு குடும்பங்களுக்கு பதினாறு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா…

Read More

மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை புனர் நிர்மாணம் சம்மந்தமான கூட்டம்

வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றது மன்னார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளைக்காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது . மன்னார் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் அதனூடாக அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய…

Read More

மக்கள் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணம் என்ன? தவிசாளர்; அமீர் அலி விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் சீர்த்திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை திவீரமாகவும், உறுதியாகவும் நின்று போராடியபோதும், அமைச்சர் ரிஷாட்டுக்கெதிராக பாராளுமன்றத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொய்யான பிரசாரங்களாலும் இறுதி நேர கால்வாரும் சம்பவங்களாலும் எமது கட்சி ஆதரவாக வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக அக்கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர்அலி தெரிவித்தார். எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர் போல் இல்லை’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்…

Read More

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி புத்தளம் நாலாம் கட்டை மொஹிதீன் நகரில்  இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பொறுப்பாசிரியர் ஜஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்முஜாஹிர், இணைப்பாளர் ரிபாஸ், மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் தோப்பூர் மத்திய குழுவின் தலைவர் ரஷாக் நளீமி ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் மத்திய குழு கூட்டம் அனைத்து மத்தியகுழுபங்குபற்றலுடன் இடம்பெற்றது.

Read More

அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் மூதூரில் இரண்டு காபட் வீதிகள் மக்கள் பாவனைக்கு மக்களிடம் கையளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுடை முயற்சியில். நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் விசேட நிதியில் வர்த்தக கைத்தொழில்கள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கடந்த வருடம் மூதூரில் புனரமைக்கப்பட்ட இரண்டு காபட் வீதிகள் மக்கள் பானைக்கு விடும் நிகழ்வு இன்று (24.09.2017) பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்த பிரதியமைச்சர் அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் எனும் வேலைத் திட்டத்தில் 2018ம் ஆண்டில் மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206பி கிராம சேவகர் பிரிவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்….

Read More