Headlines

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் குளியாப்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று மாலை (23) ரஸீன் ஹாஜியாரின் இல்லத்தில்  இடம்பெற்றது. இதன்போது, கெகுணுகொல்ல பிரதேசத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஸ்லான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான டாக்டர்.ஷாபி சிஹாப்தீன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நஸீர், முன்னாள் மாகாண சபை…

Read More

புறத்தோட்ட வட்டாரத்தின் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-முர்ஷிட் முஹம்மட்- அம்பாறை மாவட்ட, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தோட்டம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.தீனுல்லாவை ஆதரித்து நேற்றிரவு (22) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், பாலமுனை வட்டாரத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.முனாப், முன்னாள் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.ஏ.கபூர்,…

Read More

தேசிய மீலாத் விழா நிகழ்வு 2017!

-ஊடகப்பிரிவு- 2017ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று (23) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், கல்விமான்கள் என…

Read More

குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

  -ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை தலைமை வேட்பாளரும்,  குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவைத் தலைவனாவும்,…

Read More

திவுறும்பொல அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- குருநாகல், திவுறும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் ஐ.தே.க பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீனின்  விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று  நேற்று (23)மாலை இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசிய கட்சி பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீன், செம்மண்னோடை பொது வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியரை ஆதரித்து  செயற்படவுள்ளதாக தனது கருத்தைத்  தெரிவித்தார். இந்நிகழ்வில் இளம் சட்டத்தரணி ராசிக், செம்மண்னோடை வட்டாரக் குழு தலைவர் சம்மூன்  மற்றும் தக்வா பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்துகொண்டனர்….

Read More

“மக்கள் காங்கிரஸ் கிழக்கில் பாரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான பாரிய மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை நேற்று (21) அம்பாரை மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்தனர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரப் பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான டாக்டர். பரீட், கூட்டமைப்பின் அட்டாளைச்சேனை தலைமை வேட்பாளரும், வழக்கறிஞருமான அன்சில், நிந்தவூர் தலைமை வேட்பாளர் ஏ.எம். தாஹீர், வேட்பாளர்களான பொறியியலாளர் வாக்கீர் ஹூசைன், அஸ்பர் ஜே.பி மற்றும் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.    …

Read More

ஐ.நா வாக்கெடுப்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை அரசுக்கு அமைச்சர் ரிஷாட் நன்றி தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- பலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்காவுக்கு எதிராக, இலங்கை வாக்களித்திருந்ததை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இன்று (22) கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக, அமெரிக்கா கடந்த 5 ஆம் திகதி வெளியிட்ட…

Read More

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு..சதொச உட்பட ஏனைய சுப்பர் மார்க்கட்களிலும் ஒரே விலையில்.. அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

– ஊடகப்பிரிவு- கூடுதலாக கோரிக்கையுள்ள நாட்டரிசி பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதனால், அதனை கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டு வர வேண்டுமென கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். அண்மையில் நடாத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, உள்நாட்டில் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோவின் ஆகக்கூடிய விலை ரூபா.74 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது லங்கா சதொசவில் ஒரு கிலோ நாட்டரிசி ரூபா. 70 க்கு விற்பனை…

Read More

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் மாவட்டங்களும், விபரங்களும்!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள 06 மாவட்டங்களில் தனித்தும், 07 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை…

Read More

“இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை கைத்தறித்துறை ஒரு பின்னடைவை எதிர்கொண்டதுடன் வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும், பல அரசு முயற்சியாளர்கள் வெற்றிகரமாக இந்த துறைகளை புதுப்பித்துள்ளன. இன்று, பல இலங்கை கைத்தறி தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுத்து வருகின்றனர்.  எனது அமைச்சும் இந்த துறையை ஊக்குவிப்பதற்காகவும், கைத்தறி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும்…

Read More