இன்று நாட்டில் துணிந்து பேசுகின்ற ஒரு முஸ்லிம் தலைவர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஸாட் பதியூதின் மாத்திரம் தான் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி எம்.பி தெரிவிப்பு!!!
இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை நிருவாகத்துடன் வைத்தியசாலை பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- இப்போது முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சனை தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதாகும். இப்பிரச்சனையை இன்று நாட்டில் துணிந்து…
