Headlines

பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து தூதுவர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசரப் பேச்சுவார்த்தை

ஊடகப்பிரிவு உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘நாட்டரிசி மற்றும் சம்பா ஆகிய அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில், இலங்கைக்கான தாய்லாந்து, பாகிஸ்தான்மற்றும்  இந்தோனேசியா நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டாh…

Read More

கிண்ணியாவில் பல்ககலைக்கழக கல்லூரி அமைக்க அமைச்சரவை அனுமதி.

பாராளுமன்ற உறுப்பினரும் , திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக பல்ககலைக்கழக கல்லூரி; திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் அமைப்பதற்கான அமைசரவை அனுமதிக்காக தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதோடு , ரூபா 434 மில்லியன் நிதியில் மேற்படி பலகலை கழக கல்லுரி அமைபதட்கு அனுமதியளித்துள்ளது.

Read More

புத்தளத்திற்கு ஏன் இந்த அநியாயம் செய்கின்றீர்கள்? ரிஷாட் அமைச்சரவையில் கொதிப்பு

புத்தளத்திற்கு ஏன் இந்த அநியாயம் செய்கின்றீர்கள்? ரிஷாட் அமைச்சரவையில் கொதிப்பு நேற்றைய தினம் (20) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொண்டு செல்வதற்கு தனது அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமைச்சரவை எந்தவிதமான எதிர்பையும் காட்டாமல் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த போது அதற்கு கடுமையான எதிர்ப்பை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, சம்பிக்க…

Read More

பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லை என என்னால் காண முடிகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தாரும் இராப்போசன விருந்துபசாரமும் அதன் தலைவர் வை.கே.றஹ்மான் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு…

Read More

அ. இ.ம. காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செம்மண்ஓடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு செம்மண்ஓடை மதரசதுல் ஸக்கியா குர்ஆன் கலாசாலையில்  இடம் பெற்றது. கட்சியின் செம்மண்ஓடைவட்டாரக் கிளையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் ஐ.எல்.சம்முன் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதேச கட்சி அங்கத்தவர்கள், முக்கியஸ்தர்கள் என பலர்; கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்;. அத்தோடு நாட்டு மக்களுக்கு சாந்தி, சமாதானம் வேண்டியும், இனநல்லுறவுக்காகவும் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

Read More

ரவி ஏற்பாடு செய்த இப்தாரில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கலந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் ரவிக்கருணா நாயக்கவின் ஏற்பாட்டில் இன்று (19) றிச்பரி ஹோட்டலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்றூப், நவவி மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Read More

புத்தளம் நகர் பகுதி மின்வெட்டுக்கு தீர்வு..

கடந்த சில தினங்களாக புத்தளம் நகர் பகுதியில் பகல் பொழுதுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எமது புனித ரமழான் மாதத்தில் எம்மக்களுக்கு மிகுத்த அசௌகரியத்தை அளித்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 21 ம் திகதி தொடக்கம் 30 ம் திகதிக்கு இடைப்பட்ட சில நாட்களிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புனித நோன்பு பெருநாள் காலப்பகுதியில் இது எமது மக்களை சிரமப்படுத்தும் என்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை…

Read More

பாயிஸ் தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மகளீர் அணி உதயம்.

கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொலன்னாவ பிரதேசத்தின் முதலாவது ACMC மகளிர் அணி காரியாளயம் ஆரம்பிக்கும் கூட்டம் வெல்லம்பிட்டி பொல்வத்தையில் மேல்மாகான சபை உறுப்பினர் எ.ஐெ.மொஹம்மத் பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் சுயதொழில் செய்வேருக்கு தையல் இயந்திரமும் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கொப்பி புத்தகமும் வழங்கப்பட்டது.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாயிஸினால் வீதி திறந்துவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகான சபை உறுப்பினருமான எ.ஜெ.மொஹம்மத் பாயிஸ் அவர்களின் நிதியிலிருந்து வெல்லம்பிட்டிய மஹாபுத்கமுவ பாதை புனர்நிர்மானம் செய்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டது

Read More

ஒரு மதத்தின் கொள்கை கலந்து விட்ட அரசியலில் தான் நாம் பயணிக்கிறோம்-பிரதியமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித் பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லையென என்னால் காண முடிகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தாரும் இராப்போசன விருந்துபசாரமும் அதன் தலைவர் வை.கே.றஹ்மான் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு இன்று(17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார் இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளரும் லக்ஸல நிருவனத்தின் பணிப்பாளருமான றியாஸ் இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமிர் அலி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்

Read More

அமைச்சர் றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் பகிர்ந்தளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று காலை இப்பேரீச்சம்பழங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரமும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களுக்கு பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் தெரிவிக்கப்பட்டது தற்போது புனித நோன்பு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், முகத்துவாரம் கிம்புலாஎல பகுதியிலுள்ளமேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் அலுவலகத்தில் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.  

Read More