Headlines

கொக்கட்டிச்சோலையில் 378 சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

  ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் திரு கணேச மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி விசேட அதிதியாக கலந்து கொண்டார். பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான லோகநாதன், கலீல், கண்னண், மகளிர் இணைப்பாளர் திருமதி மீனா ,கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Read More

சமூக பிரச்சினைக்காக ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துவிட்டது. சம்மாந்துறையில் அமைச்சர் றிஷாட்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று மாலை (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகம் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த அரசின் காலத்தைப் போன்று…

Read More

விசாரணைக்கு முதலே தீர்ப்புக் கூறும் பொலிசார். அமைச்சர் ரிஷாட் காட்டம்

ஊடகப்பிரிவு மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து வேணடுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும் அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள் இடம் பெறும் போதெல்லாம் அதற்கு வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மகியங்கனையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனம் ஒன்று எரிந்து கொண்டிருக்கும் போதே, அந்தப் பிரதேச பொலிஸ் நிலையப்…

Read More

கலாநிதி ஜெமீல் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஜெமீல் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

Read More

AM. ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில் மூக்கக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதீவூதின் அவர்ளின் வழிகாட்டலில் கட்சியின் பிரதி தலைவரும் , அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் தலைவர் AM. ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில் மூக்கக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Read More

றிசாட் பதியுதீனும் ஜனாதிபதியும்

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்திற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நன்கு திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களின் மீது தொடர்…

Read More

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆக்கபூர்வமான முதலீட்டு சூழலை ஏற்படுத்தியுள்ளது!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களை ஆர்வப்;படுத்தியுள்ளதுடன் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக திகழும்எல்.என்.ஜி எரிவாயு நிறுவனம், இலங்கை சந்தையில் முற்றிலும் மாறுபட்ட புதிய பசுமைஎரிவாயுவினை விநியோகிப்பதற்கு முன்வந்துள்ளது என இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின் வர்த்தக பிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா தெரிவித்தார்.   கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனானஇடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ரமேஷ் குமார் முத்தா இதனை தெரிவித்தார். இவ்விசேட சந்திப்பின் போது ரமேஷ் குமார் முத்தா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:   இலங்கை மற்றும் இந்திய பொருளாதாரங்களில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இருநாட்டுபொருளாதாரங்களும் வளர்ச்சிப் பாதையில் உள்ளன. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ளபொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய  முதலீட்டாளர்களை ஆர்வப்படுத்தியுள்ளதுடன் ஆக்கபூர்வமானமுதலீட்டு  சூழலை ஏற்படுத்தியுள்ளது. எமது பிரதிநிதிகளின் சிறப்பு உறுப்பினர்கள் இலங்கையில் எரிசக்தி, எல்.என்.ஜி எரிவாயு, ஏற்றுமதி இணைப்புகள் மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றில்பங்கெடுத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். இந்தத் துறைகளில் இலங்கையில் முதலீடு செய்வதற்கும்நாம் திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளரான பெட்ரோனாட்எல்.என்.ஜி எரிவாயு லிமிடெட் இலங்கையில் ஒரு பெரிய அளவிலான திட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.   இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர சிறியகைத்தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டஉறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது வர்த்தகம் தலைமையிலான,இலாப நோக்கமற்ற கூட்டமைப்பாகும். இது ஒரு முன்னணி கொள்கை செல்வாக்குக்கு உள்ளாகியுள்ளசெயல்மிகு பயனர். முக்கியமாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது இந்திய நடுத்தர சிறியகைத்தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கு ஒரு குறிப்புபுள்ளியாக திகழுகிறது. இவை 2 லட்சம் உறுப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்தியதொழில்துறை கூட்டமைப்பானது சீனா, அவுஸ்திரேலியா, பஹ்ரைன், எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி,சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் வெளிநாட்டு அலுவலகங்கள்கொண்டுள்ளதுடன் 106 நாடுகளில் 320 நிறுவனங்களுடன் நிறுவன கூட்டுறவை கொண்டுள்ளது.அத்துடன் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்தியாவின் மிகப் பெரிய தொழில்துறைசம்மேளனமாகவும் திகழுகின்றது என்றார் இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின்  வர்த்தகபிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா.   மேற்படி இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்: எங்கள்தொழில்துறைக்குள் இந்திய முதலீட்டாளர்களை நாம் வரவேற்கின்றோம்.   பெட்ரோனாட் எல்.என்.ஜிநிறுவனம் ஏற்கனவே இலங்கை சந்தையில்  முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டத்தைமுன்வைத்துள்ளமைக்கு  எனது பாராட்டுக்கள் உங்கள் முயற்சிகள் உள்ளூர் எரிவாயு சந்தையைவலுப்படுத்த முடியும். நமது கூட்டு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நோக்கமானது, உயர்நடுத்தர வருமான மட்டத்தை எட்டுவதற்கும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கிய பங்கைவகிப்பதற்குமாக செயலாற்துகின்றது.    இலங்கைக்கான இந்தியாவின் முதலீடு ஆண்டுதோறும் 50-70 மில்லியன் அமெரிக்க டொலருக்குஇடைப்பட்டதாக காணப்படுகின்றது.  இந்திய முதலீட்டாளர்கள் இங்கு குறிப்பிடத்தக்க பங்கைக்கொண்டுள்ளனர். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையின் …

Read More

புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக தமிழ்க்கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

ஊடகப்பிரிவு   வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க்கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று, எங்களிடத்தில் கூறவேண்டும். பாராளுமன்றத்தில் நேற்று (06.06.2017) தினேஷ் குணவர்த்தன எம்பி முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு எதிரான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, 30வருடகால…

Read More

எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம், நாம் இனியும் பொறுக்கத்தயாரில்லை. பாராளுமன்றில் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கெதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?. இவ்வாறு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெகுண்டெழுந்தார். ஜெனீவா மனித உரிமைப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது, அல்லாஹ்வையும், முஸ்லிம்களின் இறைத்தூதரையும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்தும்…

Read More

அ.இ.ம.கா.மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (05) வழங்கி வைத்தார். 2006 ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபை தேர்தலில் துஆ கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாயிஸ் பின்னர் 2009 ஆண்டு மேல்மாகாணசபை தேர்தலில் மீண்டும் துஆ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு மேல் மாகாணசபை தேர்தலில் அகில…

Read More

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து

ஊடகப்பிரிவு நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று அதிகாலை 2017.06.06 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள எரிக்கப்பட்ட கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் சம்பவங்களை பார்வையிட்டதுடன் நிறுவன உரிமையாளரிடமும் விபரங்களை கேட்டறிந்தார். நுகேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் உரையாடிய அவர் இவ்வாறான சம்பவம் இந்தப் பகுதியில் முதற்தடவை அல்ல…

Read More

இறப்பர் பாஸ்மதி வெறும் நாடகமே சதொச தலைவர் அறிவிப்பு

ஊடகப்பிரிவு லங்கா சதொசவில் இறப்பர் அரிசி விற்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கதையை ஏற்க முடியாது என    சதொச தலைவர் டி.எம்.பி.தென்னகோன். இன்று 2017.06.05 வொக்ஷல் வீதி இல் உள்ள சதொச நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசியை பூரண பரிசோதனைகளின் பின்னரே எடுக்கப்பட்டதாகும.; என்றும் குறித்த அரிசி 2019.03.17 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தபடக்கூடிய நிலையில் உள்ளது. நேற்றைய  தினம் 05.06.2017; முதல் சமூக வலைத்தளங்களில்…

Read More