Headlines

முஸ்லிம்களை சந்தேகம்கொண்டு பார்க்க முடியாது : பாதுகாப்பு அமைச்சு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை  இராணுவத்தின் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படமாட்டாது.. தேசிய பாதுகாப்பில் வடக்கு கிழக்கும் உள்ளடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச  பயங்கரவாத அச்சுறுத்தல் இலங்கைக்கு இருந்த போதிலும் இலங்கை  முஸ்லிம்கள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள  இராணுவ முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…

Read More

இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய முகாமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும். இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும். இந்த முகாம் இரவு 7.00…

Read More

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பதவி இழக்கக்கூடிய சாத்தியம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பத்து தொகுதி அமைப்பாளர்கள் பதவி இழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மீளமைப்பு திட்டங்களின் அடிப்படையில் பத்து தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… மத்துகம, ஹொரண, தம்புள்ள, நாவலப்பிட்டி உள்ளிட்ட பத்து தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளக்கு எதிர்வரும் நாட்களில் புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்….

Read More

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது

காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாவனைக்குதவாத இனிப்பு வகைகள், போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் என்பவையே காலாவதியான நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்றைய தினம் மட்டகளப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஜக்கரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனையும் ஏக இறைவனின் அருளும்

நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தன்னுடைய திருப்பணியைத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்பினார்கள் ஜக்கரிய்யா (அலை). அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தி, தாழ்ந்த குரலில் மிக உருக்கமாக அழுது வாரிசு வேண்டி பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்! மனதால் உறுதியுடன் இருக்கும் எனக்கு, தலைமுடிகள் நரைத்துவிட்டன, எனது எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன. மனதில் இருக்கும் தெம்பு உடலில் இல்லை.  எனக்குப் பின்னர் என் உறவினர்கள் வழி்கெட்டு விடுவார்களோவென்று நான் அஞ்சுகிறேன். நான் செய்து கொண்டிருக்கும்…

Read More

ஆசிய கிரிக்கட் சபையின் தலைமையகம் கொழும்பில்

விளையாட்டுத்துறை அமைச்சர்  தயாசிறீ ஜயசேகரவால் ஆசிய கிரிக்கட் சபையின்  தலைமையகம்  இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 07 மெயிட்லாண்ட் கிரிசென்ட் வீதியில் கடந்த 20ந் திகதி ஆசிய கிரிக்கட் சபை  தமது தலைமையகத்தை திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கிரிக்கட் சரித்திரத்தில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். குறித்த  அலுவலகத் திறப்பு விழா வைபவத்தின் பிரதம அதிதியாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க சமூகமளித்திருந்தார்.

Read More

அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்

அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன்(87) மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திய அம்மை நோய்க்கு கடந்த 1960-ம் ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டறிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் டொனால்ட் ஏ. ஹென்டர்சன். அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவலாக அம்மை நோயால் பல கோடிக்கணக்கான…

Read More

பந்துலவின் இடத்திற்கு காமினி நியமனம்

ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் ஹோமாகம தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தை அமைச்சர் காமினி திலக்கசிறி இன்று (22) பெற்றுகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன நேற்றையதினம் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை

பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்குமாறுகோரி அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தொற்றா நோய்களை கட்டுபடுத்துவதற்கு புகையிலை மற்றும் பாக்கு பாவனையை தடைசெய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இதனால் பாக்கு சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு எதிர்காலத்தில் தடைவிதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

பம்பலப்பிட்டியில் தொழிலதிபர் சகீம் சுலைமான் மாயம்!

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டிற்கு அமையவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 29 வயதான மொஹமட் சகீம் சுலைமான் என்பவர் நேற்றிரவு வெளியில் சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார்,…

Read More

மோசடிகளை தடுத்தால் நிதி சேகரிக்க முடியும்

சுகாதார துறைக்குள் இடம்பெறும் மோசடிகளை இந்த வருடத்திற்குள் தடுத்தால் 2000 மில்லியனுக்கு அதிகமான நிதியினை சேமிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்து கொள்வனவு போன்ற விடயங்களில் அதிகமான பங்கு பணங்கள் கைமாறப்படுவதாகவும், குறித்த பங்குப் பணங்கள் அரச அதிகாரிகளுக்கு கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் புற்றுநோயாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக இரண்டு இலட்சத்துக்கு அதிகம் பெறுமதியான மருந்துகள் கிடைத்துள்ளதாகவும், மேலதிகமான மருந்துகளுக்காக ரஸ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மருந்தினை கொள்வனவு செய்வதன் பொருட்டு நிதி சேகரிப்பதின்…

Read More