Headlines

கோத்தபாய நீதிமன்றில் இன்று ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. காலி துறைமுகத்தில் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை இயக்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8…

Read More

ஆளுமையுள்ள அரசியல்வாதியாய் இருப்பதாலேயே றிஷாத் மீது கல்லெறிகின்றனர்

– சுஐப் எம் காசிம் – வட மாகாண அரசியல்வாதிகள் அத்தனை பேரிலும் ஆளுமையுள்ள அரசியல் தலைவராகவும் மக்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுப்பவராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலேயே அவர் மீது சிலர் கல்லெறிகின்றார்கள் என்று அமைச்சரின் மாந்தை மேற்கு பிரதேச இணைப்பாளரும் சமூக சேவையாருமான செல்லத்தம்பு தெரிவித்தார். மன்னார் நகர மண்டபத்தில், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “கடந்த அரசில் தமது…

Read More

மாணவத் தலைவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்

கண்டி – செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று  (29)நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். குறித்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்போது கட்டுகஸ்தோட்டை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்; அமைச்சர் றிசாத் உருக்கமான வேண்டுகோள்! சுஐப் எம்.காசிம் அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர்காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச்…

Read More

இலங்கை மகளிர் கபடி அணிக்கு வெண்கலப்பதக்கம்

ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் 43ற்கு31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும்,…

Read More

கடன் சுமையை குறைப்பதற்கு உறுதி

சர்வதேச வர்த்தகத்தைப் பலப்படுத்துவதற்கான பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் முக்கிய அங்கத்துவ நாடுகள் நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு முன்வந்துள்ன. 1961ம் ஆண்டில் நிறுவிப்பட்ட  முக்கிய அங்கத்துவ நாடுகள அமெரிக்கா, ஜேர்மன்,பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன.

Read More

‘ஆசிரியையின் வாயை மூடியது தவறு’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து, கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட கொழும்பு, மஹாநாம வித்தியாலயத்தின் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அத்துடன், குறித்த ஆசிரியைக்கு நட்டஈடு வழங்குமாறும், பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலங்கை அரசியல் அமைப்பில் 12.1 உறுப்புரை மற்றும் 14.1 உறுப்புரையில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12….

Read More

“தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம்” – ரஞ்சித் அலு­வி­கார

-ARA.Fareel- தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அச­மந்தப் போக்­கினால்  பல வரு­ட­காலம் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது. இப்­பி­ரச்­சினை  தீர்க்­கப்­ப­டா­விட்டால் தம்­புள்ளை  பள்­ளி­வா­ச­லுக்கு  மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம் என மாத்­தளை  மாவட்ட பாராளு­மன்ற  உறுப்­பினர்  ரஞ்சித்  அலு­வி­கார பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம்  முறை­யிட்­டுள்ளார். தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல்  விவ­காரம்  தொடர்பில் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு  பல­வ­ரு­டங்கள்  கடந்­து­விட்­டன. பள்­ளி­வாசல்…

Read More

இலங்கை அணுசக்தி சபையில் வாய்ப்பு!

இலங்கை அணுசக்தி சபையில் விஞ்ஞானவியல் உத்தியோகத்தர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016-10-14.

Read More

மஹிந்தானந்தவுக்கு மீண்டும் அழைப்பு!

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) ஜனாதிபதிவிசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டுத் தீயினை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More