Headlines

யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு தீர்மானம்

-சுஐப் எம்.காசிம் – பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளையும், தீர்மானங்களையும் அடுத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் வகையில், திணைக்கள அதிகாரிகளும், நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று இணைத்தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை (30/09/2016) பணிப்புரை விடுத்தார். முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நானாட்டான் பிரதேசசபை செயலாளரும், முசலி பிரதேசசபை பதில் செயலாளருமான மரியதாசன் பரமதாசனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான…

Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. எதிர்வரும் மாதம் மதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஷசி வீரவன்ச மீது வழக்கு தாக்கல்

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச மீது இன்று(30) வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலி தகவல் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து முறைசாரா வழியில் வெளிநாட்டு கடவுசீட்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆசோனைக்கமைய குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் ஷசி வீரவன்சவுக்கு எதிரான முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான்…

Read More

வற் வரி: வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும்

புதிய வற் வரி சீர்திருத்தம் தொடர்பான சட்ட மூலம், சட்ட ரீதியான முறையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது,  எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும் அதற்கு முகம்கொடுக்க அரசு தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். புதிய வரவு செலவுத் திட்டம் எந்தவொரு அரசியல் இலாபங்களையும் கருத்திக் கொண்டு தாயரிக்கப்படுவதில்லை. எதிர்வரும் தேர்தலுக்கும் வரவு செலவுத் திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இன்னும், நல்லாட்சி அரசாங்கத்துக்கு நாட்டு…

Read More

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 50 வயதான நீர்வேலி பகுதியைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…

Read More

கோத்தாவுடன் மஹிந்தவும் நீதிமன்றிற்கு வருகை!

கோத்தபாய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போழுது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகைத் தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பிரதமர் நியூசிலாந்தை சென்றடைந்தார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார். இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்திற்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பயணத்தின், பிரதமரின் மனைவி, அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

Read More

சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்  கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

ஞானசாரர் தலைமையில் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எழுக தமிழ்” பேரணிக்குக் கண்டனம் தெரிவித்தும் அதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில், வவுனியா, மாமடு பிரதேசத்தில், இன்று வௌ்ளிக்கிழமை (30) காலை, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, “ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு” என்ற பெயரில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில், சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பது…

Read More

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 – 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில நடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது வீடுகளில் இருந்து பொருட்கள் ஆடியதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடுமையான வரட்சி காலநிலை காணப்படுகின்ற நிலைமையினால் இவ்வாறான நில நடுக்கம் உணரப்பட்டதாக அல்லது வேறு சம்பவங்களினால்…

Read More

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்ந்துங்கள் – கல்வி அமைச்சர்

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது என அவர் கோரியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கல்விக் கண்ணை திறந்த ஆசிரிய தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும். தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்…

Read More