Headlines

ஜனாதிபதி பேர்லினை சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் நேற்று (15) அதிகாலை பேர்லினில் அமைந்திருக்கும் டெகல் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 01 – 02 ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் திரு. ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ் அவர்கள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்கின்றார். 03 – 06 ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில்…

Read More

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் பலி!

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரொருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Read More

இலங்கையின் தங்கப் பதக்க எண்ணிக்கை போதாது

– நெவில் அன்­தனி – இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை வென்­றெ­டுத்த 25 தங்கப் பதக்­கங்கள் போது­மா­னது என்றோ பெரு­மைப்­ப­டக்­கூ­டி­ய­தென்றோ கூற­மு­டி­யாது என விளை­யாட்டு விழா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேம­சிறி பெர்­னாண்டோ தெரி­வித்தார். அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு இவ் விளை­யாட்டு விழாவில் இலங்­கையின் பெறு­பே­று­ பற்றி கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். ‘‘இற்­றைக்கு கால் நூற்­றாண்­டுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற ஐந்­தா­வது தெற்­கா­சிய விளை­யாட்டு…

Read More

வெல்கமவுக்கு பிணை

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 24ம்; திகதி வரை  ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவருக்கு ரூபா 3.2 மில்லியனை, சட்ட விதிமுறைக்குட்படாத வகையில் வழங்கியமை தொடர்பில் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம்…

Read More

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீர் நிரப்பப்பட்ட பௌசர் வாகனம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய (15) தினம் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 4 பிக்குமாறும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த இருப்பதாலேயே இங்கு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று…

Read More

மீளவும் விண்ணப்பங்கள் கோரும் சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை மீளவும் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது.தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு  ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு  தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

Read More

இலங்கையில் பலூன் வழி கூகுள் இணையம்!

இன்று (16) முதல் பலூன் வழி கூகுள் இணைய வசதியை பயன்படுத்தும் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இணைய சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. பலூன் வழி இணைய சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து…

Read More

புத்துயிர் பெறுகிறது லசந்த படுகொலை விசாரணை!

சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பொலிஸார் மேலும் சிலரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருப்பதாகத் தெரியவருகின்றது. லசந்தவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புலனாய்வுப் பொலிஸ் குழு நுவரெலியா மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் ஒருவர் உட்பட பத்துப் பேரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிச்சை ஜேசுதாசன் என்பவர் மரணமடைந்ததையடுத்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரின் கிராம…

Read More

சரணடைந்த பிக்குகள் அடையாள அணிவகுப்பு

ஹோமாகம பொலிஸில்  சரணடைந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பல தேரர்களுக்கு ஹோமாகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்தவகையில், ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன, மெதிரிகிரிய புஞ்ஞாசார மற்றும் பஸ்ஸர நந்தஜீவ…

Read More

விபத்தில் இளைஞர் பலி : இருவர் படுகாயம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மண்முனை சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் 27 வயது ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொக்கடிச்சோலை பக்கமிருந்து வந்த துவிச்சக்கர வண்டி கல்முனை பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 27…

Read More

இன்று நீதிமன்றத்தில் ஞானசார தேரர்

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கபட்ட போதிலும், அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மீண்டும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இஸ்ரேலில் பலஸ்தீனர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

இஸ்ரேல் பலஸ்தீன் இடையே தொடர்ந்து பிரச்சினை வலுத்து வருகிறது. நேற்று (15) ஜெருசலம் பழைய நகர் பகுதியில் பலஸ்தீனர்கள் 2 பேரை இஸ்ரேலிய போலீசார் சுட்டுக்கொன்றனர். முன்னதாக நேற்று முன்தினம் (14) மாலையில், மேற்கு கரைபகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலஸ்தீனர்கள் 2 பேரை சுட்டுக்கொன்றனர். அதே போல் மேற்குகரையில் உள்ள சோதனை சாவடி அருகே பலஸ்தீனர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Read More