Headlines

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எவ்வித காரணங்களுமின்றி மூடப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 15000 திற்கும் அதிகமான மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தரூவன் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் கடமையாற்றவில்லை என தெரிவித்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி இந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டதாகவும், எனினும், ஊழியர்கள் சாதாரண பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் அனைத்து…

Read More

கோத்தாவை கைது செய்ய பணிப்புரை கிடைக்கவில்லை! பொலிஸார் தகவல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸவை கைது செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து பணிப்புரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஊடகங்களும் கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகளை சூசகமாக தெரிவித்திருந்தன. இந்தநிலையிலேயே, பொலிஸ் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள முக்கியஸ்தர்களுக்கான அறைகள் திருத்தப்படுவதாக வெளியான செய்திகளுடன் கோத்தாபாயவின் கைது விடயமும் பேசப்பட்டது. எனினும், கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படுவதற்கான பணிப்புரை கிடைக்கவில்லை என பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர்…

Read More

ஜெயலலிதாவுக்கு அடிபணியமாட்டோம்

ஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத் துடன் விடுதலை செய்வோம். ஆனால் படகுகளை மீளக் கையளிக்கமாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு வார்த்தை நடத்துவோம். தமிழகத்துடன் “பேச்சு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி ரோலர்கள் மூலம் மீன் வளங்களை…

Read More

கடமையைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

அநு­ரா­த­புரம் வலயக் கல்விப் பணி­மனைக் ­குட்­பட்ட பகு­தி­யி­லுள்ள பாட­சாலை­களில் ஐந்து வருட காலத்­துக்கு மேல் சேவை­யாற்­றிய மற்றும் மேல­திக ஆசி­ரி­யர்­க­ளுக்கு இட­மாற்றக் கடி­தங்கள் அனுப்­பப்­பட்டும் இட­மாற்றம் பெற்றுக் கொடுக்­கப்­பட்ட பாட­சா­லை­களில் கடமையைப் பொறுப்­பேற்­காத ஆசி­ரி­யர்­களின் மாதாந்த சம்­ப­ளத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்த தீர்­மா­னித்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் வல­யக் கல்விப் பணிப்­பாளர் திரு­மதி குமு­துனி ஆரி­ய­வங்ச தெரி­வித்தார். ஆசி­ரியர் இட­மாற்­றச்­சங்க உறுப்­பி­னர்கள் செய்த தவ­று­க­ளினால் ஆசி­ரியர் இட­மாற்ற நட­வ­டிக்­கை­களில் பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள போதும் இட­மாற்றக் கடி­தங்கள் கிடைத்த ஆசி­ரி­யர்கள் உடன் உரிய…

Read More

எனது பதவியை பறித்துக்கொண்டார்: ராஜபக்ஸ

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை தன்னிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்துக்கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நீர்கொழும்பு ,கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் ஒருபோதும் சுதந்திர கட்சியின் தலைமை பதவியை தானம் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனது தலைவர் பதவியை பறித்துக் கொண்டார் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

லசந்த கொலை தொடர்பில் மேலும் 10 பேரிடம் விசாரணை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் மேலும் பத்து பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்த பிச்சை ஜேசுதாசன் வசித்து வந்த கிராம சேவைப் பிரிவில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜேசுதாசனுடன் தொடர்புகளைப் பேணியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது….

Read More

வரதட்சணைக்கு எதிராக ஜே.வி.பி களத்தில்

இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும் எக்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று (14) பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் கல்வி, தொழில் இல்லா பிரச்சினையுடன் காதல் பிரச்சினையும் காணப்படுகின்றது. பணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது….

Read More

சிறப்பு வலய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள யோஷித!

சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது. யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார். இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத்தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும்…

Read More

“அடுத்த சில வாரங்களில், ஆச்சரியப்படும் தீர்மானங்கள்” – முக்கியஸ்தர்கள் கைதாகும் வாய்ப்பு

புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. புதிய சட்டமா…

Read More

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார். ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ்…

Read More

தௌஹீத் ஜமாஅத்தை கொச்சைப் படுத்திய சிங்கள பாடகர் மீது விசாரணை

பிரபல சிங்களப் பாடகரான ஹிராஜ் மீது பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிராஜினால் அண்மையில் வெளியிடப்பட்ட ”மனுசதா” என்ற பாடல் தொடர்பிலேயே இந்த விசாரணை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை விசாரிக்குமாறு (11) கொழும்பு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் செய்யப்பட்ட வழக்குத்தாக்கல் மீதான விசாரணை நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹிராஜ் மீதான விசாரணைக்கான…

Read More

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு ரூ. 8 பில்லியன்

புதிய இலத்திரனியல் அடையான அட்டையை வழங்குவதற்காக 8 பில்லியன் ரூபாய் தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நாவின்ன தெரிவித்துள்ளார்.

Read More