Headlines

ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளர் நியமனம்

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டபிள்யு.குணதாசவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். சற்று முன்னர் (2) குணதாச தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் குணதாச கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிக அடிப்படையில் பாரிய நிதி மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக குணதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி…

Read More

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க சத்திய பிரமாணம்

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். காணி அமைச்சராக கடமையாற்றிய எம்.கே.டி.எஸ்.குணவர்தன இறையடி எய்தியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும் ஜோன் அமரதுங்க கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திக்கிறேன் – சபாநாயகர்

இரத்தம் எடுக்கும்போது ஏற்படும் வலியை விட பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் சபாநாயகரான கரு ஜயசூரியவும் இதன்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன்போது சபாநாயகரின் இரத்தமாதிரி பரிசோதனைக்காக அவரிடம் இரத்தம் எடுக்கும் போது “சற்று வலி இருக்கும்” என தாதி ஒருவர் சபாநாயகரிடம் கூறியுள்ளார். எனக்கு இந்த வலி பெரிதாக தோன்றவில்லை காரணம் இதை விட அதிக வலிகளை…

Read More

தகவல் அறியும் சட்டமூலம் இம் மாதம் சமர்ப்பிப்பு

தகவல் அறியும்  சட்ட மூலம்  இந்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறியும் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த  சட்டமூலம்  பூர்த்தியாக்கப்பட்டு, மாகாணசபைகளிடம் கருத்து கோரப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை,குறித்த சட்டமூலம்  அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், விவாதம் பற்றிய…

Read More

மேசனுக்கு 20 வருட சிறை

இளவயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் மேசனைக் குற்றவாளியாக இனங்கண்ட அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கேமா சுவர்ணாதிபதி, அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர், மேல் நீதிமன்றத்துக்கு வருகைதராமல், நீதிமன்றுக்குள் செல்வதைத் தவிர்த்து தப்பியோடிவிட்டார். இதுதொடர்பில், நீதிமன்ற பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அதன்பின்னர், குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைதண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளியை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில்…

Read More

விமானப்படை நூதனசாலை: இன்று பொதுமக்கள் பார்வைக்கு

இலங்கை விமானப் படையின் 65வது வருட நிறைவு தினத்தையொட்டி, இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலையை பொதுமக்கள் இன்று இலவசமாக பார்வையிட முடியும் என விமானப்படைப் பிரிவு தெரிவித்துள்ளது. விமானப்படையின் 65வது நிறைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் இரத்த தானம் வழங்கல், இலவச சுகாதார சேவைகள், கல்விச் சேவைகள், கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

2500 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 15ம் திகதி வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமைபெற்ற 2500 இலங்கையர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே, 4200 பேர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

க.பொ.த. சா.த பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம்…

Read More

பாலஸ்தீன அகதி முகாமுக்குள் அத்துமீறி தாக்குதல் – இஸ்ரேல்அட்டூழியம்

அத்துமீறி, இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன அகதி முகாமுக்குள் நுழைந்தனர். இவ்வாறு அத்து மீறி நுழைந்த காட்டு மிராண்டி இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன ஒருவர் கொல்லப்பட்டார். இந்த அத்துமீறிய தாக்குதலில் 22-வயது பாலஸ்தின இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவம் தரப்பில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நீதிவான் திலன பண்டாரவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

நீதிவான் திலன பண்டாரவிடம் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு அண்மையில் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரிலேயே அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு திலன பண்டாரவுக்கு விளக்கம்கோரிய கடிதத்தை நேற்று  (1) அனுப்பியுள்ளது. மொன்டிரோ ஜீப்பில் சரணாலயத்துக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாருடன் சென்ற நீதிவான், அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது.

Read More

நாளை வரு­கிறது இந்­திய நிபுணர்குழு

இலங்கை – இந்­திய பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்­பந்தம் தொடர் பில் இரு நாட்டு அதி­கா­ரிகள் மட்டப் பேச்சு வார்த்­தை­க­ளுக்­காக இந்­திய உயர் மட்ட குழு நாளை வியா­ழக்­கி­ழமை இலங்கை வரு­கின்­றது. இரு நாட்டு அதி­கா­ரி­களின் பங்­குப்­பற்­ற­லுடன் வெள்­ளிக்­கிழமை கொழும்பில் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலங்கை, – இந்­திய கூட்டு ஒப்­பந்தம் தொடர்­பான செய­ல­மர்வு இடம்­பெ­ற­வுள்­ளது. இலங்கை, – இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் ஊடாக கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தாரம் மற்றும் தொழில் நுட்­பத்தை மையப்­ப­டுத்­திய கூட்டு ஒப்­பந்­தத்­திற்கு இணக்கம்…

Read More

யாழில் பாரிய போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகை­யிலும் யாழில் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்நிலையில் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் 14பேர் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி நேற்று (01) செவ்­வாய்க்­கி­ழமை எட்­டா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான வெகு­ஜன அமைப்பின் ஏற்­பாட்டில் இன்று முற்­பகல் 10 மணி­ய­ளவில் யாழ்ப்­பாண பிர­தான பேருந்து நிலை­யத்­திற்கு முன்­பாக இக்­க­வ­ன­யீர்ப்பு…

Read More