Headlines

சபாநாயகர் சாம்பியா பயணம்

அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167 நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் உட்பட 2000 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலிருந்து சபாநாயகர் கருஜயசூரியவுடன் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,பிரதி அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கே.கோடீஸ்வரன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க…

Read More

இன்று முதல் கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கரையோர பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இன்றிரவு 8 மணி முதல் தாமதமாகுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு வெள்ளவத்தையினூடான ரயில் பாதையிலுள்ள பாலம் புனரமைக்கப்படுவதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் இன்றிரவு 8 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.30 வரை கொழும்பு கோட்டையிலிருந்து கல்கிஸ்ஸை வரையும் ஒரு பாதையிலான ரயில் சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை…

Read More

எனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது; மஹிந்த

தான் ஆட்சிக்கு வரும்போது நாடு உணவு நெருக்கடி, சுனாமி பேரழிவு, எண்ணெய் நெருக்கடி மற்றும் பயங்கரவாத நெருக்கடி ஆகியவற்றிற்கு முகங்கொடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று (17) கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் மக்கள் பேரணியின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். அவ்வாறான ஒரு நிலையிலும் கூட, சர்வதேச நாடுகளில் தங்கி வாழ்வதை தவிர்த்து நாட்டை அரிசியில் அபிவிருத்தி செய்வதற்கு மற்றும் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு முடிந்ததாகவும், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை…

Read More

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காவிட்டால் கலவரங்கள் ஏற்படலாம் – ட்ரம்ப்

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் குடி­ய­ரசுக் கட்சி தன்னை நிய­மிக்­கா­விட்டால், கல­வ­ரங்கள் ஏற்­ப­டலாம் என்று தாம் நினைப்­பதா­க டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். குடி­ய­ர­சு­ கட்சி சார்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் தேர்­தலில் முன்­னணி­யி­லி­ருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கடு­மை­யான வார்த்தை பிர­யோ­கங்­களால் குடி­ய­ரசுக் கட்சி, அதன் பேர­வையில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மற்­றொ­ரு­வரை முன்­மொ­ழிய வாய்ப்­பி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. ஜன­நா­யகக் கட்­சியைப் பொறுத்­த­வரை ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்­ன­ணியில் உள்ளார். அமெ­ரிக்க  ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 8 ஆம்  திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி…

Read More

“வேர்ல்ட் எக்ஸ்போ” 2017 கண்காட்சியில் இலங்கை

கசகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் எக்ஸ்போ” 2017 கண்காட்சியில் நமது நாடும் பங்குபற்றி சிறந்த வௌிக்காட்டல்களை வழங்கவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை உப பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் நேற்று (17) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவ்வகையில் 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10…

Read More

காசநோயினால் வருடத்துக்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் பிர­காரம் வரு­ட­மொன்­றுக்கு உல­க­ளவில் 5 இலட்சம் பேர் காச நோயினால் உயி­ரி­ழப்­ப­தோடு இலங்­கையை பொறுத்­த­வரை ஒரு வரு­டத்­திற்கு மாத்­திரம் 14 ஆயிரம் பேர் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக இனங்­காணப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார கல்வி பணி­யகம் தெரிவித்­தது. மக்கள் மத்­தியில் இந்நோய் தொடர்பில் எவ்­வ­ளவு தூரம் தெளிவின்மை காணப்­ப­டு­கின்­றதோ அந்­த­ளவில் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யினை குறைத்து காச நோயினை எமது நாட்டில் முற்று முழு­வ­து­மாக கட்­டுப்­ப­டுத்த முடியும் எனவும் தெளிவு­ப­டுத்­தி­யது. இம்­மாதம் 24ஆம் திகதி உலக…

Read More

வடகொரியா பிரஜைகளை விடுவிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள வடகொரிய தூதரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. 150,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த போது வடகொரியப் பிரஜைகளை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த வடகொரியர்கள் ஓமானிலிருந்து சீனா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்…

Read More

மஹிந்தவின் கூட்டத்திற்கு 34 சுதந்திரக் கட்சி MPகள் பங்கேற்பு

மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 பேர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் கட்டளையையும் மீறி இவர்கள் பேரணியில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி சார்பில் அங்கம் வகிக்கும், 51 உறுப்பினர்களில், 45 பேர் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இவர்களில் 34 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஏனையவர்கள் கூட்டணிக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாவர். நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க,…

Read More

ஒன்லைன் மூலம் தெரிவியுங்கள்

நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும்…

Read More

ராஜித்த சேனாரத்ன, நாடு திரும்பியுள்ளார்

சுகயீனம் காணரமாக சிங்கப்பூரிற்கு மேலதிக சிகிச்சைக்காக சென்றிருந்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்றிரவு 9.30 அளவில் அமைச்சர் நாட்டை வந்தடைந்துள்ளார். மேலும், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகயீனமுற்று சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மின்சார விநியோகத் தடை இனி இல்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா

நுரைச்சோலை அனல் மின்சார மைய திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இனிமேல் மின்சார விநியோக தடையிருக்காது என்று மின்சக்தித்துறை பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி நுரைச்சோலையில் இருந்து முழுமையான 900 மெகாவோட்ஸ் மின்சார அலகையும் நேற்று நள்ளிரவுடன் தேசிய மின்சார விநியோகத்துக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் நேற்று மாலை வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவிக்கிறார். எனவே அமைச்சரின் கருத்துப்படி இன்று முதல் மின்சார விநியோகத்தடை இருக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டின் மின்சார…

Read More

விக்டோரியா நீர்மின் நிலைய இயந்திரங்களும் பழையவை

விக்டோரியா மின்நிலையத்தில் 3 மின்னுற்பத்தி இயந்திரங்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில், இவ்வியந்திரங்கள் 30 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்றும் அவற்றிலிருந்து உயரிய பயனைப் பெற வேண்டுமாயின் அவற்றை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

Read More