Headlines

மின்­சாரம் தாக்கி 94 பேர் உயி­ரி­ழப்பு

மின்­சா­ரத்தின் தாக்கம் கார­ண­மாக 2015 ஆம் ஆண்டு 94 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக இலங்கை பொதுப் பயன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் கூட்­டுத்­தா­பன தொடர்­பாடல் பிரி வின் பிரதிப் பணிப்­பாளர் வி.விம­லா­தித்தன் தெரி­வித்தார்.

Read More

மஹிந்த குழப்புகின்றார்

குழப்புகின்றார் மஹிந்த  சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் சந்திரிகா  ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பிள­வுகள் இல்லை. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் கட்­சியை குழப்­பிய அதே அணுகு­மு­றையை மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போதும் முன்னெ­டுத்து வரு­கின்றார். எக்­கா­ரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிளவுப­டுத்த இடமளிக்க முடியாது. நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட கூட்­டத்­திற்கு நாம் அஞ்­ச­மாட் டோம். அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை என முன்னாள் ஜனா­தி­ப­தி­ சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தும் மஹிந்த ராஜ­பக்…

Read More

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் : பிரதமர்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது தேசிய மாநாட்டிலேயே பிரதமர்  இதனைத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இத்தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

Read More

இந்திய பிரஜைகள் 12 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று   வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

சிசு மூச்சு திணறி உயிரிழப்பு – தலவாக்கலையில் சம்பவம்

தாய் ஒருவர் தனது இரண்டரை மாத ஆண் சிசுவுக்கு கொடுத்த பால் சிசுவின் மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதனால்  சிசு மூச்சு திணறி உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை சவூத் தோட்டத்தில்  இடம்பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸ் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி வீ. சுந்தர் ராஜ் தெரிவித்தார். வட்டகொடை சவூத் தோட்டத்தில் வசிக்கும் சசிக்குமார் ரிதிக்சன் என்ற ஆன் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வின் தாய். வீ. முருகாந்தினி இவர் உயிரிழந்த…

Read More

24 ஆம் திகதிக்கு பிறகு முறைப்பாடு செய்ய முடியாது..!

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதை நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Read More

பாரிய மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை பெறும் நடவடிக்கை 24ம் திகதியுடன் நிறைவு

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு முன்னர் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளுமாறு பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம்…

Read More

தம்மிக்க ரணதுங்க தம்மிக்க ரணதுங்க நிலையத்தில் ஆஜர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். சட்டத்தரணியுடன் சென்ற அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக அறிவிப்பதற்காக அங்கு சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் அவர்களை செல்போனில் படம் பிடித்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து பொலிஸ் இது குறித்து…

Read More

ஜாஎல பிரதேசத்தில் மின்மாற்றி வெடிப்பு

சற்று நேரத்திற்கு முன்னர் ஜாஎல – கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள உப மின் நிலையத்திலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்தார். 

Read More

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிபதி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை  குறிப்பிடத்தக்கது.

Read More

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விமல் வீரவன்ச, வீரகுமார திசாநாயக்க, ஜயந்த சமரவீர, மொஹமட் முசம்மில், ரோஜர் செனவிரத்ன, பியசிறி விஜேயநாயக்க உள்ளிட்ட 07 பேர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான்…

Read More

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பெக் சுசன்டோனோ ஆகியோர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது.. இலங்கை அரசின் உதவியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பென்க் சுசன்டோனோ ஆரம்ப உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் ஆலோசனையின் பேரில் 2010ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி மாநாடானது ஆரம்பமாகியது. கடந்த மாநாடனது கொரியா, ஜப்பான், தாய்லாந்து…

Read More