Headlines

“எதிர்கால நன்மைக்காக வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்”

– க.கிஷாந்தன் – வாக்காளர் பதிவில் அக்கறையின்றி இருக்கும் மலையக மக்கள், எதிர்கால நன்மையை கருத்திற்கொண்டேனும் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்வது அவசியம் என பிரிடோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ‘ஜுன் மாதம் வாக்காளர்களை பதிவு செய்யும் மாதம் என்பதால் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் கிராமசேவகர்கள், வாக்காளர் படிவங்களை விநியோகித்து வருகின்றனர். எனவே, மலையக மக்கள் அப்படிவங்களை பெற்று தாம் வாக்களார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ எனவும் அந்நிறுவனம் கோரியுள்ளது. இது தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் மேலும்…

Read More

தேர்தலை நடத்த தயார் : மஹிந்த தேசபிரிய

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு தாம் தயார்நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். உள்ளுராட்சி சபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சரினால் தமக்கு வழங்கப்படும் வரை தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணைக்குழுவினரால் தேர்தல் பிற்போடவில்லை எனவும் அவர் மேலும், தெரிவித்தார். கம்பளை நகரில் இடம்பெற்ற பேரணி நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

Read More

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு பிணை

எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்ன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும்  அவரை விடுவிக்குமாறும் எம்பிலிபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி குமாரி எம்.அபேரத்ன உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த பொலிஸ் அத்தியட்சகரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணித்துள்ளார்.

Read More

அமெரிக்காவில் பூஜித்த

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று -01- பொலிஸ் மா அதிபர் அமெரிக்காவிற்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார். உலகப் பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார். பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க கடமையாற்றுவார். பொலிஸ் மா அதிபர்களின் மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர நாடு…

Read More

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் – மைத்திரி, ரணில், றிஷாத்தை உள்ளடக்கி குழு

வடக்கில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழுவொன்றை அமைக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களுக்கு, 5543 வீடுகளும், முஸ்லிம்களுக்கு, 16,120 வீடுகளும் தேவைப்படுவதாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கூட்டாகச் சமர்ப்பித்த அமைச்சர்கள், சுவாமிநாதன், ரிசாத் பதியுதீன், முஸ்தபா ஆகியோர், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பொருத்தமான வழிமுறைகளை…

Read More

நாட்டுக்கு முன்னுதாரணமாக விஜித ஹேரத்

ஜே.வி.பி.யின் பிரச்சார  செயலாளர் விஜித ஹேரத் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வாகன விபத்து தொடர்பில் விஜித ஹேரத் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜித ஹேரத் மதுபோதையில் வாகனத்தை செலுத்தவில்லை எனவும் அது பரிசோதனைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சி ஒழுக்கமானவர்களை உருவாக்கியுள்ளதாகவும், சில தரப்பினர் இந்த விபத்தின் ஊடாக கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

නව ව්‍යවස්ථා කමිටු වාර්තාව කථානායක වරයාට 

– නිලුපුලී –   ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා ප්‍රතිසංස්කරණය පිළිබඳ මහජනතාව දරන  අදහස් විමසීම් ඇතුලත් කමිටු වාර්තාව  නිල වශයෙන් කතානායකවරයා වෙත  භාරදීම ඊයේ (01) සිදු වූ අතර ලෝකයේ  හොඳම  ව්‍යස්ථාව අප රටෙන් ඉදිරිපත් කරන්නට නොහැකි වුවත්  මෙය ඒ සඳහා හොඳ ප්‍රවේශයක් වන බවට කිසිදු සැකයක් නැති බවත් කතානායක කරූ ජයසුරිය මහතා  සඳහන් කළේය.මාස කිහිපයක් තිස්සේ රට පුරා ස්ථාන…

Read More

சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைச்சர் றிசாத் அடிக்கல்லை நாட்டினார்

வவுனியா வடக்கு  ஈரட்பெரிய குளத்தில் சிங்கள மக்களுக்கென அமைச்சர் றிசாத்தின் சொந்த முயற்சியினால் சுமார் 25 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல்லை இன்று (02/06/2016) அந்தப் பிரதேசத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் முத்து முஹம்மத், பொதுசனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கும்…

Read More

ගංවතුරෙන් හානිවූ කොලොන්නාව පිරිසිදු කිරීමට අමේරිකානු යුධ භටයින්ගේ ආධාර

– නිලුපුලී – පසුගියදා සිදුවූ මහා ගංවතුර සහ නායයාම් වැනි විපත් අභියස අසරණ වූ ජනතාවට උපකාර කිරීමට අපගේ රණවිරුවන් ඇතුළු බොහෝ  සංවිධාන හා තරුණ කොටස් ඉදිරිපත් වී දිවා රෑ නොබලා කැපවීමෙන් කටයුතු කළහ . ඊයේ  දින එනම් ( ජූනි 1) වන විට මෙම සමාජ සත්කාරය සඳහා අමෙරිකානු යුධ හමුදා භට පිරිසක් ද එක්ව සිටීම විශේෂයෙන්…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் புதுவகை தொற்று நோய்

மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளங்காணப்படாத நோயொன்று பரவி வருவதாகவும் அந்நோய் சிறிய வகை கொசுக்களினால் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தள்ளன. இந்நோய் முதற்தடவையாக சிரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இத்தஞ்சம் கோருவோர் மத்திய கிழக்கு வலயத்திலிருந்து ஐரோப்பா வரையில் புலம்பெயர்வதனால் இந்நோய் லெபனான், துருக்கி, ஜோர்தான் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை…

Read More

கொலன்னாவ குப்பைகளை அகற்ற விசேட குழு

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தையடுத்து கடுமையாக பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் குவிந்து கிடக்கும் அசுத்த கழிவுகளை அகற்றுவதற்கான விசேட பிரிவொன்று நிறுவப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  அநுர பிரியதர்ஷன் யாப்பா தெரிவித்தார். கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்காகவும் சீரமைப்பதற்காகவும் 141 மில்லியன் ரூபா நிதியை அமைச்சரவை…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா உதவி

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2.28 மில்லியன் ( 339.72 மில்லியன்) அமெரிக்க டொலர்களை  வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிவாரண தொகையில் மருந்துப் பொருட்கள், ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை சீன ஊடகமான பிங்ஹூவா, செய்தியாக வெளியிட்டுள்ளது.

Read More