Headlines

7 வரு­டங்­க­ளாக தொழில்­ அதி­கா­ரிகள் வெற்­றிடங்கள் நிரப்­பப்­ப­ட­வில்­லை

தொழில்துறைசார் அதிகாரிகள் மாட்டு வண்டி யுகத்திலிருந்து விடுபட்டு புதிய நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு மாற வேண்டும், இல்லாவிட்டால் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தொழில் அமைச்சில் 202 வெற்றிடங்கள் நிலவுகின்றன. கடந்த ஏழு வருடங்களாக எந்தவொரு வெற்றிடமும் நிரப்பப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரச சேவை ஊழியர் உத்தியோகத்தர் சங்கத்தின் 65ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து…

Read More

தலைப்­பிறை பார்க்­கும் மாநா­டு

ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நாளை 5 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையின் பின்பு இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மா­கிய மாலை 6.31 மணி­முதல் புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறும் பிறையைக் கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் நேரிலோ அல்­லது கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கங்­களில் ஏதா­வது ஒன்றின் ஊடாக அறி­யத்­த­ரு­மாறும் சகல முஸ்­லிம்­க­ளையும் கொழும்பு பெரி­ய­பள்­ளி­வாசல் கேட்டுக்…

Read More

பொது பலசேனாவின், SLTJ இற்கு எதிரான வழக்கு : ஒத்தி வைப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பலசேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்­ளது. பொது பலசேனா சார்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு கடந்த வியா­ழக்­கி­ழ­மை கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜமாஅத்தின் தலைவர் ரியாழ், செயலாளர் அப்துர்…

Read More

மத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு வாழ்த்து

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. நாட்டின் பணவியல் ஆணையம் புதிய ஆளுநரின் நியமனத்தின் பின் பொதுநம்பிக்கையை மீட்க உதவுவதுடன் அவரது 6 ஆண்டு சேவைக்காலத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அவரது முழு ஆதரவையும் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை,  நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உறுதிப்பாடு, சுபீட்சம் நோக்கிய புதிய மத்திய வங்கியின் ஆளுநரின்  முயற்சிக்கு  அனைத்து பங்குதாரர்களும் அதரவு வழங்க வேண்டுமென இலங்கை வர்த்தக சம்மேளனம்…

Read More

மனித கடத்தல் வியாபாரம்; இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் பதிவு

மனித கடத்தல் வியா­பா­ரத்­துக்கு எதி­ராக முறை­யி­டு­வ­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட பிரி­வுக்கு கடந்த இரண்­டரை மாதங்­களில் 15 முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. எனவே எதிர்­கா­லத்தில் மனித கடத்தல் வியா­பா­ரத்தை முற்­றாக கட்டுப்படுத்த முடி­யு­மான நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்­துள்ளார். இது­தொ­டர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மனித வியா­பா­ரத்­துக்கு எதி­ராக முறை­யி­டு­வ­தற்­காக விசேட பிரி­வொன்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்த விசேட பிரிவு ஆரம்­பிக்­கப்­பட்­ட­து­முதல் இது­வரை 15 முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன….

Read More

பேராதனை பல்கலைகழக ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்தப் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (3) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த கண்டி மாநகர சபையின் தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர். தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

Read More

சவூதியில் 13 உம்ரா யாத்திரியர்கள் பலி

சவூதி அரேபியாவில் தாயிப் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். பஸ்ஸின் டயர் வெடித்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் எகிப்தியர்கள் எஎன தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஊடகவியலை மேம்படுத்த சுயாதீன ஆணைக்குழு!

ஊடகவியலை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கான சம்பள திட்டங்கள், ஒழுக்க கோவைகள் சரியான முறையில் திட்டமிடப்பட்டு வழிநடத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகார அட்டைகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்தார். நமது நாட்டு புகைப்பட கலைஞர்களுக்கான ஒழுக்க கோவையினை தயாரித்து அதனை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்று(02) சனிக்கிழமை கொழும்பு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது….

Read More

இஸ்லாத்தை குழி தோண்டிப் புதைக்க தலைவர்களை குறிவைக்கும் ஷீஆக்கள்

இஸ்லாத்தில் சில முக்கியமான மனிதர்களை, தலைவர்களைக் குறிவைத்து இந்த ஷியாக்கள் பல சதித்திட்டங்களை மேற் கொண்டனர், கொள்கின்றனர். அந்தவகையில், முன்னால் ஈரான் ஜனாதிபதி சதாம் ஹூசையினையும் தூக்கிலிட்டது முக்ததா என்ற ஷியா நயவஞ்சகன்தான். சதாைமை காட்டிக் கொடுத்து தன் கையாளேயே தூக்கிளிட்டது  ஷியாக்கள்தான். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் என்றும் எதிரிகள் இந்த ஷியாக்கள். ஷியாக்கள்  இஸ்லாத்தை சீர் குழைத்து அதில் முக்கிய தூண்களாக விளங்கும் சில முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து அவரை வீழ்த்தினால் இந்த சமூகத்தையே வீழ்த்தலாம் என்று அக்கு வேறு ஆணிவேறாக அறிந்து…

Read More

அவசரகால மின்சார முகாமை ஆராய குழு நியமனம்

இலங்கையில் அவசர நிலைமைகளின் போது மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினால் அவசர நிலைமைகளின் போது தடையின்றி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கூறினார். அத்துடன் குறித்த அறிக்கையை இந்த மாத நிறைவிற்குள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு மற்றும் சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் போது…

Read More

அரசாங்கத்திடம் மஹிந்த கோரிக்கை!

அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை, ஹூங்கம பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். தம்முடன் இடம்பெறும் அரசியல் மோதல்களை பின்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்லுமாறும் இதன்போது மகிந்த ராஜபக்க்ஷ கேட்டுகொண்டுள்ளார்.

Read More

கைவிடப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின், வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் -03- விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More