நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு 3000 வைத்தியர்கள் தேவை
நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு; இன்னும் மூவாயிரம் வைத்தியர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆயினும் ஒரு வருடத்தில் ஆயிரம் வைத்தியர்கள்தான் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்களுள் 250இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இப்பிரச்சினை இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர்தான் தீர்க்கப்படும் என சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார். மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு அண்மையில் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட சுகாதார பிரதி அமைச்சர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:…
