Headlines

“நாம் இறைவனை நம்புகின்றவர்கள், ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிமும் இந்த நாட்டைப்பிரிக்கவோ அல்லது நாட்டில் இன்னொரு யுத்தம் மூலம் இரத்த ஆறு ஓடுவதையோ ஒருபோதும் விரும்பவும்மாட்டோம் அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். நாம் இறைவனை நம்புகின்றவர்கள் ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read More

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அமைச்சர் றிஷாத் (வீடியோ)

புனித அல்குர் ஆனையும் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இனவாதிகள் கொச்சைப்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read More

கடும்போக்கு பிக்குகளை கட்டுப்படுத்துங்கள்: 21 முஸ்லிம் MPகள் கையொப்பமிட்ட மனு ஜனாதிபதியிடம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கடும் போக்கு பௌத்தர்களின் இன ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக ஆறு அமைச்சர்கள் , மூன்று இராஜங்க அமைச்சர்கள் , இரு துணை அமைச்சர்கள் உள்ளிட்ட 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒப்பமிடப்பட்ட மனுவொன்றும் ஜனாதிபதியிடம்…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 9A சித்திகளைப் பெற்ற 195 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்வும் “முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கத்தின்” ஏற்பாட்டில் கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  அமைச்சர் றிஷாத்  கொண்ட கலந்து கொண்டபோது.

Read More

இஸ்லாத்திற்கெதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள் இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம்

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் ஒன்று வல்லாதிக்க சக்திகளால் திட்டமிடப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தருணத்தில் அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்படுவதை புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் அனைவரும் ஏற்றுக் கொள்வர். இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இந் நாட்டையும் நம் தேச மக்களையும் ஈமானுக்கு ஒட்டிய விதத்தில் நேசிக்கிறோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்….

Read More

ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்களை அமைச்சர் றிஷாத் சந்திப்பு

கொழும்புப் பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில், நேற்று (10) பாராளுமன்றக் கட்டிடத்தில் தொகுதியில் அமைச்சர் றிஷாத் சந்தித்து  கலந்துரையாடியபோது.

Read More

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் சூடுபிடுத்த ஞானசார தேரர் விவகாரம்

ஞானசார தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் நேற்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதான அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஞானசார தேரரின் நடவடிக்கையால் முஸ்லிம்கள் மன வேதனையுடனும், ஆத்திரத்துடனும் இருப்பதாகவும் அவரைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எத்தனையோ தடைவ கூறிய போதும் அவர் எல்லை கடந்தே செல்கின்றனர்.நான்…

Read More

ஜெயலலிதா மறைவு; இந்திய உயர்ஸ்தானிக அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்து

தமிழ் நாட்டின் முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மறைவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்திட்டபோது.

Read More

“மீளக்குடியேறிய மன்னார் முஸ்லிம்களே வில்பத்துவை பாதுகாக்கின்றனர்”  அமைச்சர் றிஷாத்

மன்னாரில் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு மீளச் சென்று குடியேறியுள்ள முஸ்லிம்களே வில்பத்து வனசரணாலயத்தை பாதுகாத்து வருகின்ற போதும் அவர்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள் வனவளத்திணைக்களத்தினால் 2012இல் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வனவளத்துக்குரியதாக பிரகடனப்படுத்தப்பட்டமை மிக மோசமான நடவடிக்கை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வில்பத்துதொடர்பாக எங்கள் மீது அபாண்டங்கள் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது. வில்பத்து…

Read More

வாழ்வாதார மேம்பாட்டுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

நேற்று முன் தினம் (2016.12.08) வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றோருக்கு இக் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் கட்சிக்கிளை காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்பிக்குச் செயலாளருமான முனவ்வர் மற்றும்…

Read More

முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றினார். அமைச்சர் றிஷாத் பேசியவை பின்வருமாறு. “இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகின்ற மதத்தை பின்பற்றவும், மத கடமைகளை நிறைவேற்றவும் அணுமதிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளும் இன வாத அமைப்புகளுக்கும் சோரம் போகும் வகையில் தெஹிவலை பள்ளிவிடயத்தில் நடத்துகொண்டமையையிட்டு மிகவும் கவலையடைந்ததுடன் இந்த தெஹிவல பள்ளி மற்றும் மத்ரஸா சட்ட பூர்வமாக நிர்மாணிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் ஹன்ஷாட்டில் இனைக்கும்படி  வேண்டிக்கொள்கின்றேன்.” “ஒரு சில இனவாதம்…

Read More

“ஞானசாரர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?” –  அமைச்சர் றிஷாத் கேள்வி

சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோத விடும் வகையில் அப்பட்டமான விஷக் கருத்துக்களைப் பரப்பியும் அல்லாஹ்வை மோசமாக கேவலப்படுத்தியும் வருகின்ற ஞானசார தேரருக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ள போதும் இற்றைவரை அவர் ஏன் கைது செய்யப்படாமல் இருக்கின்றார் என பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, ’வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என முஸ்லிம்களாகிய…

Read More