Headlines

மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின்  நிதி ஒதுக்கீட்டில், மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு இன்று  25.11.2016 திகதி பி.ப.3.30 மணிக்கு மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி வைக்கவுள்ளார். மேலும், இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி சாள்ஸ் திட்டப்பணிப்பாளர் செழியன் மற்றும் திணைக்கள அதிகாரிகளும்…

Read More

“புத்தளமே விழித்தெழு” அ.இ.ம.கா.வின் மாபெரும் நிகழ்வுகள்

வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீனின்வழிகாட்டலில் எதிர்வரும் 27.11.2016 அன்று புத்தளத்தில் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன . இதற்கான நெறிப்படுத்தலை புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான அல்ஹாஜ் M.H.M. நவவி  ,  A.R.M.அலி சப்ரி  , முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான S. ஆப்தீன் எஹியா ஆகியோர் ஒழுங்கு படுத்தி உள்ளனர் . ”புத்தளமே விழித்தெழு” எனும் தாரக மந்திரத்தோடு இடம்பெறும் இந்த நிகழ்வு காலை…

Read More

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்றுகூடல்

தற்போதைய நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஒரே அமைப்பாக செயற்பட மிகவும் உச்சாகத்துடன் முன்வந்துள்ள ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்களின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27.11.2016) சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.    ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், சுவிஸ்,நோர்வே, சுவீடன் ,ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலி உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஒன்றுகூடலில்…

Read More

வெடித்து சிதறிவரும் இஸ்ரேல் (புகைப்படம் இணைப்பு)

இஸ்ரேலில் செய்மதி ஒன்று வெடித்ததால் பாரியளவில் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது தீயணைப்பதற்காக பல விமானங்கள் உட்பட தீயணைப்புப் படைகள் களம் இறங்கியும் அணைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் இஸ்ரேல் துர்கீ, கப்ருஸ்,யூனான்,இத்தாலி போன்ற அண்மித்த நாடுகளில் உதவிக்கரம் கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்கு இழைத்த தீங்குகளுக்கும் கொடுமைகளுக்கும் இறைவன் பொறுத்திருந்து தண்டனையளிப்பவன் என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்

Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வு வரவேண்டுமென விரும்புபவர்கள் மற்றைய சிறுபான்மை சமூகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டுமென்று குரல் கொடுப்பவர்கள் இன்னுமொரு சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் விதத்தில் செயற்படக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினரொருவர் எப்போதுமே எந்த விடயத்தையும் வேற்றுக்கண்ணோட்டத்துடன் நோக்கி இனவாதமாகப் பேசுவதையே தமது தொழிலாகக் கொண்டு நடந்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றில் இன்று (24) தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நிருவாகத்தின் கீழான அமைச்சுக்கள், கமத்தொழில் அமைச்சுக்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில்…

Read More

தேசியக் கூட்டுறவுக் கொள்கை அமைப்பது தொடர்பான பயிற்சிச் செயலமர்வு: அமைச்சர் றிஷாத் பங்கேற்பு

தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இன்று (24) காலை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள், கூட்டுறவு சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டனர். தேசிய…

Read More