Headlines

12 ஆம் திகதி ஹஜ் பெருநாள்!

புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முஸ்லிம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் தகிதி அறபா தினம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமையே பிறை பார்க்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Hajj is an annual piligrimage to Mecca for millions of Muslims from all over the world. In 2016, Hajj, one of the world’s largest gatherings,…

Read More

சுலைமான் கொலை – மேலும் ஐவர் கைது

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று மேலும் ஐவர் கைது…

Read More

கூட்டு அரசாங்கமே சிறந்தது!

கூட்டு அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இன்று கூட்டாக இணைந்து ஆட்சி நடத்தும் தரப்பினர், நாட்டை அபிவிருத்தி செய்ததன் பின்னர் பிரிந்து சென்றால் பிரச்சினையில்லை. ஏழு கூட்டுக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் அமைத்த காலங்களும்…

Read More

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய தென்னாபிரிக்க விமானம்!

சீனா நோக்கி பயணித்த தென்னாபிரிக்க விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா பயணித்த விசேட விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா நோக்கி பயணித்த நிலையில், விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் போது விமானத்தில் இருந்து…

Read More

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவர்கள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தை ஹேக் செய்த இரு இளைஞர்களையும் பிணையில் விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தை ஹேக் செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களில் 17 வயது மாணவரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டிலும், 27 வயதான இளைஞரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை நான்கும், 25 000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும்…

Read More

குருணாகலில் கோர விபத்து!

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு: வேனில் பிரசவமான கொடூரம்!

ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், அவருக்கு தனியார் வேனில் பிரசவமாகியுள்ள சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராயகாடா மாவட்டம் பலக்கமனா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து சுனிதாவின் கணவர் ஆம்புலன்ஸ் சேவையான 102க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவசர ஆம்புலன்ஸ் சேவையான 106க்கும் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்பு கொண்டு ஒரு மணிநேரத்திற்கு மேலாகிவிட்டதால், குடும்பத்தினர் உதவியுடன் சுனிதாவை சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் கணவர். பாதி வழியில் பிரசவ…

Read More

சு.கட்சிற்கு இன்றுடன் 65 வருடங்கள் பூர்த்தி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(02) 65 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவினால், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, புதிய அரசியல் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. உலகில் முதல் பெண் பிரதமரும், உலகில் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இக்கட்சியிலிருந்து உருவாகினர். இன்றைய நிறைவு தினத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீ ல.சு.கட்சியினால் நாளை(04) குருணாகலையில் பெரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

Read More

கரும்பு பிரச்சினை தீர்வுகாண அமைச்சரவைப்பத்திரம்

–சுஐப் எம்.காசிம்  – அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையத் தீர்ப்பதற்காக, அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும், வெகுவிரைவில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கரும்பு உற்பத்தியாளர்களையும், ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையை நிருவகிக்கும் கல்லோயா பிளான்டேசன் நிருவாகிகளையும், அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (01/09/2016) அம்பாறைக் கச்சேரியில் சந்தித்து, இரு தரப்பினரினதும் கருத்துக்களை அறிந்துகொண்டார். இந்த சந்திப்பில் அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும்…

Read More

பான் கீ மூன் – அமைச்சர் றிஷாத் நாளை சந்திப்பு

-சுஐப் எம்.காசிம் – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நாளை காலை (02/09/2016) கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கம் கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்தும், நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஐநா செயலாளர் நாயகம் பான்…

Read More

குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகருக்குள் குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசி எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதிலும் வாகனங்களில் செல்லும்போது வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார். குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசுவதால் தொற்று நோய்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச  நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More