Headlines

சு.கட்சிற்கு இன்றுடன் 65 வருடங்கள் பூர்த்தி




ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(02) 65 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவினால், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, புதிய அரசியல் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு

செப்டம்பர் 02 ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

உலகில் முதல் பெண் பிரதமரும், உலகில் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இக்கட்சியிலிருந்து உருவாகினர்.

இன்றைய நிறைவு தினத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீ ல.சு.கட்சியினால் நாளை(04) குருணாகலையில் பெரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *