Headlines

மீண்டும் சுனாமியா!

நாட்டில் மீண்டும் சுனாமி வந்தால் என்ன செய்வது என்று மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சுனாமி ஒத்திகையொன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த ஒத்திகை இடம்பெற உள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த ஒத்திகை நாட்டின் 14 மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், சுனாமியின் போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக…

Read More

யாழிற்கு நள்ளிரவிலும் பேருந்து சேவைகள்

ருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்து சேவையினைஇலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது. திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு புதிய பேருந்து சேவை ஆரம்பித்துவைக்கப்படுகின்றது. மேலும் பயணிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தினமும் நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வவுனியா ஊடாக மற்றொரு சேவையும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 7.00 மணிக்கு இறுதியான பேருந்து சேவை…

Read More

இந்தியாவின் தொழில்நுட்ப கற்கைகளை பெற்றுக்கொள்ள இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்தியாவில் தொழில்நுட்ப கற்கைகளுக்கு புகழ் பெற்ற நிறுவனமாகிய Indian Institutes of Technology (IITs)யில் திறமை மிக்க இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை 2017-2018 கல்வி ஆண்டிலிருந்து ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக Indian Institutes of Technology (IITs) யின் விரிவுரையாளர்கள் அடங்கிய குழு ஒன்று செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலை நடாத்தவுள்ளது. இக்கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி புதன்கிழமை…

Read More

பிரதமருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்குமிடையில்; சந்திப்பு

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று மாலை (31) பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது

Read More

கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம்

கல்வி அமைச்சின் புதிய  செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Read More

கோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு…

Read More

ஐ.நா அலுவலகத்தின் முன்பு இராவண பலய ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து இராவண பலய அமைப்பு ஒரு மோசமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பு இன்று (1) காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை இராவண பலய அமைப்பின் பிக்குகள் முன்னெடுத்திருந்தார்கள். இதன்போது பான் கீ மூன் தமிழ் மக்களுக்கு சார்பானவர் என்றும், சிங்கள மக்களை கணக்கில் கொள்வதில்லை என்றும் பலத்த கோஷங்களை எழுப்பினார்கள். ஐ.நாவின் முன்றலில் ஒன்று கூடிய இவர்கள், பான் கீ முனுக்கு…

Read More

நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read More

வாகன உரிமையை உறுதி செய்து கொள்ள சலுகைக் காலம்

வாகன உரிமையை உறுதி செய்து கொள்ள சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாது வாகனங்களை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வாகன உரிமை கோராது வாகனங்களை பயன்படுத்தி வருவோர் வாகன உரிமையை கோர முடியும் என தெரிவிக்கப்படுகிறது. வாகன உரிமை கோரப்படாத வாகனங்களின் உரிமை மாற்றம் செய்யப்படும் போது வழமையாக உரிமை…

Read More

SLS தர நிர்ணய தலைக்கவசங்களுக்கான சட்டம் இன்று முதல் கட்டாய அமுல்

இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று (1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் நோக்குடன் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகாரிகளின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார். இந்த சட்டமானது பல வருடங்களுக்கு முதலே வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டதாகவும், தலைக்கவசம் அணியாமல் நாளொன்றிட்கு 7 அல்லது 8 மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே தர நிர்ணயம் கொண்ட தலைக்கவசங்களை மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள்…

Read More

ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது. “இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த…

Read More

ஒலுவில் கடலரிப்பு – அமைச்சரவையில் என்ன நடந்தது என்ன?

-ஒலுவில் கமால் அஹ்மட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை -31- ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒலுவில் கடலரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார். அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்த  அர்ஜூன ரணதுங்க ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தினை தடுக்க அமைச்சர் றிசாத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இதுகுறித்து என்னுடனும், எனது அதிகாரிகளுடனும் பலதடவை உரையாடினார். அந்த மக்கள் படும் அவலங்களை என்னிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தார் அதன் பயனாக…

Read More