Headlines

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் நாடு வளம் பெறுகிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கானவேலைத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உலகின் பொருளாதார சுற்றாடல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட இலங்கையினால் பொருளாதார இலக்குகள் பலவற்றை பூர்த்திசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வெனிசுவெலாவில் 18 ஆம் திகதி நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தவிடயங்;களை குறிப்பிட்டார். இறைமைஒற்றுமை சமாதானம் ஆகியவற்றின் ஊடாக அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில்அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில்…

Read More

இலங்கையில் அடுத்த – நீல பச்சை சகாப்த மாநாடு கொழும்பில் நடைபெற ஏற்பாடு

கடல்வளம் குறித்து ஆய்வொன்றை முன்னெடுத்து 2018ஆம் ஆண்டளவில் பாரிய அளவிலான கடல் தொழில் தகவல்கட்டமைப்பு தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த  – நீல பச்சை சகாப்த மாநாடு ( ‘ Sri Lanka NEXT – Blue Green Era conference’)  என்ற தலைப்பில்மாகாநாடொன்றை நடத்துவதற்கானஎ ஏற்பாடுகளையும் இலங்கை  மேற்கொணடுவருவதாகவும் அமைச்சர் கூறினார். எங்கள் சமுத்திர மாநாடு 2016 என்ற மாநாட்டில் உலையாற்றுகையிலேயே அமைச்சர் மங்கள…

Read More

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு : மேலும் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் நுகேகொடை பிரதேசத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், துமிந்த சில்வாவின் தலையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, நீதிமன்ற நடவடிக்கைகளை…

Read More

போலி கச்சேரியை சுற்றிவளைப்பு

மாத்தறை கொப்பராவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்திவரப்பட்டபோலி கச்சேரியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவரும் கைதசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் மாத்தறை பிரதேசத்ததைச் சேர்ந்த 41 வயதாகனவர் என தெரிவிக்கப்படுகின்றது. சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது குறித்த இடத்திலிருந்து போது அடையாள அட்டைகள்,  பிறப்புச்சான்றிதல்கள் , அரச நிறுவனங்களின் முத்திரைகள் மற்றும் இதற்காக பயன்படுத்தப்பட்டகணினி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 25 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு ஆபத்தானதாய் அமையவில்லை என நியுயோர்க் நகர தீயணைப்புத் திணைகளம் தெரிவித்துள்ளது. வெடிப்புக்கான காரணம் தெளிவில்லாதபோதும், குப்பைக்கூடையிலிருந்தே வெடிப்பு நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத…

Read More

ஹிலாரியின் பாதுகாவலர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. இதில் 51.44 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதவாகியுள்ளதாக விசேட பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு நான்கு மாதங்களில் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பிரதமர்…

Read More

அமைச்சர் றிஷாத்தை வீழ்த்த சதி!

முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது அவர்களது அரசியல் இருப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயாகுமென்று மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார். அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருவதை உணர்ந்துள்ள மு கா தலைவர் ஹக்கீம் அம்பாறை அரசியல்வாதிகளை பகடைக்காயாக பயன்படுத்தி அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான ஊடகவியலாளர் மாநாடுகளை…

Read More

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம்

ஐக்கிய நாடுகள் பொது சபையின் 71வது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இதற்காக ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்ட அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான மஹிந்த சமரவீர, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட பலர் இடம்பெறவுள்ளனர். ஐக்கிய நாடுகள்…

Read More

கட்டுநாயக்கா விமானநிலையம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின்…

Read More

எவன்கார்ட் ; இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எவன்கார்ட் விவாகரம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 5 திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காலி நீதவான் நிலுபுலி லங்காபுர  குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.  மேலும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும்  எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும்  நீதவான்  உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த…

Read More