Headlines

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம்

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து ஆராய்ந்து இலங்கை மலேரியா நோயை ஒழித்த நாடு என்பதை உறுதிப்படுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரும்…

Read More

இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை

இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனின் முக்கிய கடைத் தொகுதி ஒன்றில் இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு சில தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு…

Read More

ஐ.தே.க.வுடன் இணைய திகாம்பரம் இணக்கம்

-ஆர்.ரமேஸ் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

குடும்பமே படுகொலை: குடும்ப தலைவன் கைது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக்கதின் பேரின் அக்குடும்பத்தின் தலைவனை கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே…

Read More

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு!

நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய…

Read More

டொனால்ட் டிரம்பிற்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு

முதல் ஐரோப்பிய யூனியன் தலைவராக ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…

Read More

கள்வர்களுக்கு இடமளியேன்: பிரதமர்

-மொஹொமட் ஆஸிக் – கடந்த அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளின் கூக்குறலால் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திதி திட்டங்களை இடை நிறுத்த முடியாது என்றும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐந்துவருடங்களுக்கு பயணிக்கும், அதனை கவிழ்ப்பதற்கு கள்வர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டி செங்கடகல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு, கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியில் எதனை…

Read More

அமெரிக்க விசேட கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் ஈரூ­டக போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் இன்று இலங்கை வர­வுள்­ளது. இலங்கைக் கடற்­ப­டை­யு­ட­னான இரு­த­ரப்பு உற­வு­களை அதி­க­ரிக்­கவும், அமெ­ரிக்­காவின் ஆத­ரவு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்­சி­களை அளிப்­ப­தற்­கா­க­வுமே அமெ­ரிக்க கடற்­படைக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வர­வுள்­ளது. இது­தொ­டர்­பாக இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், “21ஆம் நூற்­றாண்டு, பல்­வேறு வழி­க­ளிலும் இந்­தோ -­ப­சுபிக் நூற்­றாண்­டாக இருப்­ப­தா­க வும், தமது மூலோ­பாய அமை­வி­டத்தின் மூலம் இலங்கை நல்ல நிலையில்…

Read More

தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் – ஜாகிர் நாயக் பேட்டி

தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் -ஜாகிர் நாயக் பேட்டி..! `Modi only Indian PM to visit so many Muslim countries in two years … I am for him if he works for Hindu-Muslim unity’ Mumbai-based Islamic tele-evangelist Zakir Naik is in the eye of a storm, after being named as the inspiration behind terrorists who attacked the Holey…

Read More

தொலைபேசி + ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் வந்தால் A/L பெறுபேறு ரத்து

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத்…

Read More

சர்வதேசத்திடம் மண்டியிடோம்!

உள்ளகப்பொறிமுறை ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும், சர்வதேசத்திடம் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் மறைமுக அடக்குமுறை தொடர்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கொண்டு வந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மின்சாரக் கதிரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை காப்பாற்றி விட்டோம். சர்வதேசத்திடம் நாம் மண்டியிட மாட்டோம் என…

Read More

இணைய பாவனையில் தகாத வார்த்தைப் பிரயோகமா.. இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்

இணையத்தளம் மற்றும் கைத்தொலைபேசிகளின் ஊடாக தவறான பயன்பாடு மூலமோ அல்லது பாலியல் தொல்லைகளோ வேறு முறையில் பாலியல் சேட்டைகளோ மேற்கொள்ளப்படின் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக முறைப்பாடினை பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 0773220032 எனும் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இன்னும் குறித்த சேவையானது  24 மணித்தியாலங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. மேலும், தமக்கு கிடைக்கப்பெறும் அசௌகரிய…

Read More