ஊடகவியலை மேம்படுத்த சுயாதீன ஆணைக்குழு!
ஊடகவியலை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கான சம்பள திட்டங்கள், ஒழுக்க கோவைகள் சரியான முறையில் திட்டமிடப்பட்டு வழிநடத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகார அட்டைகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்தார். நமது நாட்டு புகைப்பட கலைஞர்களுக்கான ஒழுக்க கோவையினை தயாரித்து அதனை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்று(02) சனிக்கிழமை கொழும்பு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது….
