Headlines

ஐ.தே.கட்சியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு…

Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

“சத்தோச” பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

Read More

தவறு செய்தவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை!- பிரதமர்

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைகோப் குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால்அவர் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றைய தினம் (29) வழங்கிய நேர் காணலிலே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின்…

Read More

மன்னார் மாவட்டத்தில் எட்டு மணித்தியாலம் நீர் விநியோகத் தடை!

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் (30) எட்டு மணித்தியால நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. மன்னார் நீர் விநியோக வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் முருங்கன் நீர் விநியோக மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த தடை ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும், முருங்கன் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை…

Read More

ஞானசாரரை, கைதுசெய்ய வலியுறுத்தி மனு – RRT அதிரடி

பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக தெரிவித்தும் அவரை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் சட்டத்தரணிகள் இன்று முறைபாடு செய்துள்ளனர். இதனை சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன்  jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார். 3 வேறு வேறு முறைபாடுகள் ஞானசாரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. RRT Legal update Today 29.06.2016 RRT Made three complaints against Ganasara Himi  at police head quaters under sections of Penal code & Prevention…

Read More

துருக்கியில் தேசிய துக்க தினம் – கோபத்தை மறந்து பேசிய புடின்

முக்கிய விமானநிலையத்தில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தி, நாற்பதுக்கும் அதிகமானோரை கொன்றதை அடுத்து இன்று துருக்கி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கின்றது. இந்த தாக்குதலில் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமும் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் பதின்மூன்று பேர் வெளிநாட்டவராவர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பே இருப்பதாக தாம் நம்புவதாக துருக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள். 2 இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட…

Read More

துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் – ஒபாமா

துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 41 பேர் பலியானர்கள். 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனை அமெரிக்க அதிபர் ஒபாமா தொடர்புக்கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் துருக்கி…

Read More

எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயார்

  மஹி­யங்­கனை சம்­பவம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்.   தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் …   மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வரம் உரு­வானால் அதற்கு முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்புக் கூற­வேண்டும்.அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியும் முஸ்லிம் கவுன்­ஸிலே என சந்­தே­கிக்­கின்றோம்    பௌத்­தர்கள் முஸ்லிம் கொடி­யையோ குர்­ஆ­னையோ எரிக்­க­வில்லை. மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­களே பௌத்த கொடி­யையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்­துள்­ளார்கள். பௌத்த கொடியை எரித்த முஸ்­லிம்­களை கண்­டிக்­காது அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தாது…

Read More

பெருநாளுக்கு அடுத்த தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்குக

அரசு, எதிர்­வரும் ஜூலை மாதம் 6 ஆம் திக­தியை நோன்புப் பெருநாள் விடு­முறை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளதால் முஸ்லிம் மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­களின் நலன்­க­ருதி பெருநாள் தினத்­தை­ய­டுத்த தினங்­க­ளான 7 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஆகிய இரு தினங்­க­ளையும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை தினங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­படி முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார். கல்வி அமைச்­ச­ருக்கு இது…

Read More

பயங்கரவாதத்திற்கு எதிராக இணையுங்கள் – துருக்கி

துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார். உலகில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்கலாம் ஆகையால் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசுகளும் கூட்டாக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் நேடோ உறுப்பு…

Read More

தேசிய பல்கலை கூடைப்பந்தாட்டக்கு கிழக்கிலிருந்து இருவர்!

இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன் மற்றும் கிறிஸ்ரின் விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சீனாவில் எதிர்வரும் மாதம் 19 – 24 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 3 – 3 கூடைப்பந்தாட்டதொடரில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் இருவரும் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணிக்கு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு சங்கம் மு.பரணிதாசனை பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொரியா சர்வதேச நிறுவனத்தினால் அதிக நன்கொடைகள்

நாட்டில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையிலும், வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் கொரியா கொலோன் சர்வதேச நிறுவனத்தினால் அதிகளவிலான நன்கொடைகள் நமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்கும் வகையில் 12,000,000 ரூபா பெறுமதியான 03 தண்ணீர் தாங்கிகளும், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 8,000,000 ரூபா…

Read More