Headlines

முஸ்லிம் பெண்ணுக்கு அறிவுரை கூற முயன்ற நபர் பாடம் கற்றார்

பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­தி­யத்தில் பஸ்ஸில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய கலா­சாரம் குறித்து அறி­வுரை கூற முயன்ற நபர் ஒருவர், தானே பாடம் கற்­றுக்­கொண்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. நியூபேர்ட் நக­ரி­லி­ருந்து சிவம்­பிரன் நகரை நோக்கி சென்­று­ கொண்­டி­ருந்த மேற்­படி பஸ்ஸில் பெண்­ணொ­ருவர் தனது மக­னுடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்தார். அப்பெண் முஸ்லிம் கலா­சா­ரப்­படி நிகாப்பும் அணிந்­தி­ருந்தார். இவர்கள் ஆங்­கிலம் அல்­லாத வேறொரு மொழியில் உரை­யா­டு­வதை அவ­தா­னித்த ஆங்­கி­லேய நபர் ஒருவர், மேற்­படி பெண்­ணுக்கு அறி­வுரை…

Read More

அபாயா (Poem)

– நிஷவ்ஸ் – எங்கட ராத்தாமார் உடுக்கிற அபாயா என்னென்று சொல்வதடி கண்ணாடி சீகுயின்ஸ் கன்றாவி டிசைனகள் கண்ணுக்குள் குத்துதடி அஞ்சாறு அபாயாக்கள் பெருநாளைக்கு அள்ளுறார் நியாயமாடி பிஞ்சுக்கு கவுண் வாங்கக் காசில்லா பெற்றோரும் உள்ளாரடி நெஞ்சையும் உடம்பையும் நெருக்கி இறுக்கி உடுக்கின்ற அபாயாக்கள் இது ஹிஜாபா இல்லை நடிப்பா அடி மார்க்கத்தை மலிவாக்கிறார். (அடி..) போட்டிக்கு விலை கொடுத்து வாங்குகிறார் காட்டிக் கலர்ஸ் போட மாட்டிட்டு முழிக்கின்றார் சில கணவர் மாட்டுக்கு புரியலைன்னு கார்ட்டுக்கும் கடனுக்கும் கனக்க…

Read More

27 நாடுகள் கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம்: ஐரோப்பிய யூனியன் தலைவர்

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் அங்கம்…

Read More

சோமவன்சவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விரிவான வேலைத்திட்டங்கள் மூலம் கட்சியை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய தலைவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என்றும்,கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சில நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மக்கள் தொழிலாளர்கட்சியின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஒலிம்பிக் தின ஓட்டத்தை பிரேஸில் தூதுவர் ஆரம்பித்து வைத்தார்

சர்வதேச ஒலிம்பிக் குழு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் முகமாக உலகளாவிய ரீதியில் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் தின ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் காலி நகரில் நேற்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டதுடன் வரைதல் போட்டி, ஒலிம்பிக் தின ஓட்டம் என்பன நடைபெற்றன. சர்வதேச ஒலிம்பிக் குழு 1894இல் ஜூன் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக் தினம் பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் நவீன ஒலிம்பிக் அமைப்பின் பிறப்பைக் கொண்டாடுவதும்…

Read More

அதிகமான செல்வங்கள் இருப்பது ஆசிய மக்களிடமே

உலகிலேயே அதிகமாக செல்வத்தை வைத்திருப்பவர்கள் ஆசியர்கள் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. Capgemini என்ற நிதி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2015ஆம் ஆண்டின் ஆய்வின்படி ஆசிய செல்வந்தர்களின் பணமானது 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் காலப்பகுதிகளில் வட அமெரிக்காவில் உள்ள செல்வந்தர்களின்பணமானது 16.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலராகவும், ஆசிய செல்வந்தர்களின் பணம் 17.4 ட்ரில்லியனாகவும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை கடந்த 2014 ஆம்…

Read More

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகவுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பிரதமர் அலுவலகலத்துக்கு வெளியிலிருந்து தனது மேற்படி முடிவை கமெரோன் அறிவித்திருந்தார். தள்ளாடும் கப்பலை, எதிர்வரும் வாரம் மற்றும் மாதங்களில் சீர் செய்ய எத்தனிக்கவுள்ளதாக கமெரோன் தெரிவித்துள்ளார்.(tm)

Read More

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள நிலையில் பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, ஸ்ரேலிங் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நேற்று அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் விலை சர்வதேச சந்தையில் 1.5 டொலராக உயர்ந்திருந்தது. இன்று முடிவுகள் வெளியாகத் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும்…

Read More

எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கைது

சட்டவிரோத ஆயுத விநியோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (23) இரவு காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாக குற்றபுலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. -zn-

Read More

வன்முறைக்கு பொதுபல சேனா முயற்சி – முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்குங்கள்

– ஏ.ஆர்.ஏ.பரீல் – மஹி­யங்­க­னையில் இடம்­பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பு அளுத்­கமை சம்­பவம் போன்ற ஒன்­றினை உரு­வாக்க முயற்­சிப்­ப­தா­கவும் அப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச்  செய்­யு­மாறும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் ஜாதிக பல­சே­னாவின் செய­லா­ள­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­டமும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். அமைச்­சர்கள் இரு­வ­ரையும் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு மஹி­யங்­க­னையில்…

Read More

நாட்டில் 50,000 ஹெரொயின் பாவனையாளர்கள்

இலங்கையில் ஹெரொயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 வரை உயர்ந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

Read More

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து : ஒருவர் பலி

மாரவில – முதுகடுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் குறித்த கட்டிடமும் சேதமடைந்துள்ளது. குறித்த நபர் குளிர்சாதன பெட்டியை பழுது பார்துக்கொண்டிருக்கும் போது, குளிர்சாதன பெட்டியின் காற்று அழுத்தி வெடித்ததன் காரணமாகவே தீ பரவியுள்ளது. இதன்பின்னர், காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

Read More