முன்னாள் நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை
முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானை குட்டி ஒன்றை வைத்திருந்தார் என இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்களின் காரணமாக திலின கமகே கட்டாய விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னிணைப்பு இன்று கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே பினனயில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
