Headlines

முன்னாள் நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானை குட்டி ஒன்றை வைத்திருந்தார் என இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்களின் காரணமாக திலின கமகே கட்டாய விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னிணைப்பு இன்று கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே பினனயில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More

ப்ரெடி கமமே மீதான தாக்குதலுக்கு அரசு கண்டனம்

இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஊடகவியலாளர் ப்ரெடி கமமே மீது, நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அரசாங்கம் கண்டித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷனி குணதிலக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ப்ரெடி கமகே, இன்று நீர்கொழும்பு நகர சபைக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய பட்டியலுக்கு சுகாதார அமைச்சர் அனுமதி

புதிதாக வழங்கப்படும் வைத்தியர் பதவி நியமன பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷடி சில்வா தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய பட்டியலை நாளை health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்கலாம். இன்றையதினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால தலைமையில் குறித்த நியமனப் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் துட்டன்காமன். 9-வது வயதில் பட்டத்திற்கு வந்த இவன் கி.மு. 1333 முதல் கி.மு. 1324 வரை புதிய இராஜ்ஜியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். பதவியேற்று சுமார் 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இந்நிலையில், 1922-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர், பொக்கிஷங்கள் அடங்கிய துட்டன்காமன் மம்மியுடன் கூடிய கல்லறையை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது….

Read More

ආපදාවන්ගෙන් අසරණ වූ ජනතාවගේ මානසික සෞඛ්‍ය නංවමු 

– නිලුපුලී – ගංවතුර සහ නායයෑම් හේතුවෙන්  අසරණ වූ ජනතාවගේ මානසික සෞඛ්‍ය සඳහා  මැදිහත්වීමෙන්   ඔවුන්ගේ අවශ්‍යතා හඳුනාගෙන මානසික පීඩනය අවම කරගත  හැකි බව ප්‍රජා වෛද්‍ය පාරිසරික අභියෝග හා පසු ආපදා කළමනාකරණය පිළිබඳව කොළඹ සෞඛ්‍ය අධ්‍යාපන කාර්යංශයේ අද දින එනම්  (ජුනි 02) පැවැති මාධ්‍ය හමුවට සහභාගීවෙමින් විශේෂඥ වෛද්‍ය චිත්‍රමාලී ද සිල්වා මහත්මිය පැවසුවාය .කොළඹ, ගම්පහ…

Read More

ගංවතුර අපද්‍රව්‍ය බැහැර කිරීමට ස්වේච්ඡා සංවිධාන වලට ආරාධනා 

ගංවතුර  හේතුවෙන් හානියට පත් කොළඹ ප්‍රදේශයේ ඝන අපද්‍රව්‍ය බැහැර කිරීමේ කටයුතු සඳහා ඕනෑම ස්වෙච්ඡා සංවිධානයකට සහාය විය හැකි බව  කොළඹ,සෞඛ්‍ය අධ්‍යාපන කාර්යාංශයේ පැවැති මාධ්‍ය සාකච්ඡාවකට අද දින  ( ජුනි 02) සහභාගී වෙමින් වෛද්‍ය නොයෙල් විජෙසිංහ මහතා විසින් පවසන ලදී.ඒ සඳහා සහභාගී වීමට කැමැත්ත දක්වන ස්වෙච්ඡා සංවිධාන ඇත්නම්  පළාත් පාලන අමාත්‍යාංශයේ දුරකතන අංකය ( 011-2423146 )…

Read More

மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து உதவுங்கள்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலனோம்புகை நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிவதற்கு வாரத்தில் ஒரு முறையேனும் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாவட்டங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நேற்று (01) முற்பகல் கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read More

நாட்டு மக்கள் வலியுறுத்தும், பிரதான 3 விடயங்கள்..!

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முற்றாக நிராகரித்திருப்பதாகவும் உண்மையான ஜனநாயகம் பிரதிபலிக்கக் கூடியதான அரசியலமைப்பின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க நேற்று புதன்கிழமை விசும்பாயவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். தற்போதுள்ள கட்சித்தாவல் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமெனவும், தேர்தலில் தோல்வி கண்டவர்கள் மாற்று வழிமூலம் பாராளுமன்றம் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட வேண்டுமெனவும் மக்கள் தெரிவித்திருக்கின்றனர். நாட்டின் சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்தறியும்…

Read More

ඡන්දය ජනතා අයිතියක් – මහින්ද දේශප්‍රිය 

– නිලුපුලී –  ජුනි මස 01 දිනට යෙදුන ඡන්ද දායකයන්ගේ  දිනය  නිමිත්තෙන් “ඡන්දය ඔබේ අයිතියයි,  කිසිදු  ඡන්දහිමියෙකු අත්නොහැරෙන මැතිවරණ ක්‍රමයක්“  තේමාව යටතේ  වයස අවුරුදු 18 සම්පුර්ණ  කළ  සියළුම  දෙනා  මැතිවරණ නාම ලේඛනයට තමන්ගේ නම ඇතුළත් කිරීමට කටයුතු කරන ලෙස මැතිවරණ කොමිෂමේ සභාපති මහින්ද දේශප්‍රිය  මහතා මහ ජනතාවගෙන් ඉල්ලීමක් කර ඇත .එසේම  සෑම නිවසකටම ඡන්ද හිමියන්…

Read More

தனிமனிதரின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ஹர்ச டி சில்வா

தனியார் பஸ் போக்குவரத்து சபையின் தலைவர் கெமுனு விஜேரத்தின அவருக்கு வேண்டியதைப் போன்று பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை! 30 குடும்பங்களை இடம்பெயருமாறு கோரிக்கை

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வலியுறுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று தோட்ட நிர்வாகத்தால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ஏற்பட்ட மண்சரிவின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் பலியானதையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த தோட்ட மக்களை வெளியேறுமாறு முன்கூட்டியே அறிவித்துள்ள…

Read More

கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை திட்டத்தில் மாற்றம்

கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதை அமைக்கும் திட்டத்தில் உள்ள பகுதிகள் சிலவற்றில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் டீ.சீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதன் காரணமாக அதிவேகப் பாதை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது அதிகம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த பாதையில் பொத்துஎரயிலிருந்து கலகெதர வரையான பகுதியிலே மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும், இந்தப் பகுதிகளில் உள்ள…

Read More