Headlines

மஹிந்தவை ஒதுக்க மாட்டோம் – அமைச்சர் நிமல்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது தனிப்­பட்ட கொள்­கை­க­ளுக்கு அமை­வாக செயற்­ப­டு­கின்றார். அதற்­காக அவரை ஒதுக்கிச் செயற்­படும் நிலைப்­பாட்டில் சுதந்­திரக் கட்­சியும் இல்லை. எனவே பேச்­சு­வார்த்தை ஊடாக அவ­ரது பிரச்­சி­னையை அணுகி அதற்­கான தீர்­வொன்றை எட்­டவே நாம் முயற்­சிக்­கின்றோம் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.

Read More

ஜனாதிபதி பிரித்தானியா பயணம், டேவிட் கமருனுடன் முக்கிய பேச்சு

மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று -10- இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், சிறிலங்காவில் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறும் அவர், பிரித்தானியப் பிரதமரிடம்…

Read More

நாட்டின் பல பகுதிகளில் அடை மழைக்கு வாய்ப்பு!

நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில்…

Read More

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நிறைவு

காணாமற்போனோர் தொடர்பில் வட மாகாணத்தில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைத்து நாளை முதல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டீ குணதாஸ தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

அரச சேவையாளர்களுக்கு 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்!

அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆவணங்களை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும்போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்திள்ளது

Read More

உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக வழக்கு!

எலன் மெதினியாராமயவின் மாநாயக்கதேரர் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கீழ் வழக்கு தொடரப்படவுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தம்மாலோக்க தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தம்மாலோக்க தேரருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் சட்ட மா அதிபர், புலனாய்வு பிரிவினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வழக்குத் தொடர்வது குறித்த குற்றப்பத்திரிகை…

Read More

இலங்கை மீதான ஆயுத ஏற்றுமதி தடை நீக்கம்!

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுத ஏற்றுமதித்தடை தளர்த்தப்பட்டுள்ளமையைஅமெரிக்காவின் வாணிப கழகம் வரவேற்றுள்ளது. இந்த தடை 2008ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்தது.இதன்படி இலங்கைக்கு ஆயுதங்களை மற்றும் பாதுகாப்பு சேவைகளை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. எனினும் இது 2012ம் ஆண்டு கடல் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் என்பவைதொடர்பில் திருத்தியமைக்கப்பட்டது. இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் காலத்தில் இது தளர்த்தப்பட்டுள்ளமையானது இரண்டுநாடுகளின் உறவில் ஆரோக்கியமான விடயம் என்று அமெரிக்காவின் வாணிப கழகம்குறிப்பிட்டுள்ளது.

Read More

அரசாங்கத்தை கவிழ்க முடியாது – ராஜித

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் எந்தவொரு முயற்சியும்வெற்றியளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (9) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தினை கவிழ்ப்பதே சிலரின் நோக்கமாகவும் உள்ளது. ஆனால், அரசாங்கத்தினை கவிழ்ப்பதானது அனைவரினதும் கனவு மாத்திரமே என அமைச்சர் மேலும்குறிப்பிட்டார்.

Read More

யோஷித வாக்குமூலமளிக்க வந்தார்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காகச் சென்றுள்ளார்.

Read More

பனாமா பேப்பர்ஸ்: 65 இலங்கையர்கள் இவர்கள்தான் (முகவரியுடன் விபரம் இணைப்பு)

சர்சைக்குள்ளான பனாமா ஆவணங்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. பனமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய விபரங்கள் இதன் மூலமாக வெளியிடப்பட்டிருந்தன இதேவேளை இதனூடாக இந்தியாவில் ஆயிரத்து 46 பேர் மற்றும் 828…

Read More

வவுனியா மக்கள் அமைச்சர் றிஷாத்திடம் அங்கலாய்ப்பு

-சுஐப் எம்.காசிம் – 50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் வாழ்கின்ற இந்தப் பிரதேச காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை (பெர்மிட்) தராமல் தொடர்ந்தும் இழுத்தடித்து வருகின்றார்கள். நீங்களாவது இந்த விடயத்தில் கரிசனைகொண்டு எமக்கு உதவ வேண்டுமென, வவுனியா தமிழ்க் கிராம மக்கள் அமைச்சர் றிசாத்திடம் கோரிக்கை விடுத்தனர். வவுனியா தமிழ்க் கிராமங்களுக்கு கடந்த சனிக்கிழமை (07/05/2016) விஜயம் செய்த அமைச்சரிடம் மக்கள் பல கோரிக்கைகளை விடுத்து, அவற்றை நிவர்த்தித் தருமாறு வேண்டினர். மணிபுரம், பழைய மணிபுரம், சமயபுரம், கணேசபுரம்,…

Read More

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்க வடகொரியாவின் ஆளும்கட்சி ஒப்புதல்

அணு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும், அதிகமாக தயாரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வடகொரியா நாட்டு ஆளுங்கட்சியின் செயற்குழு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை…

Read More