Headlines

 அத்துருகிரிய நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த வாயிலில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயில், கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது

களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், இன்னும் மூன்று நாட்களில் கங்கையின் நீர்மட்டம் சாதாரண நிலைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. எனினும், வெள்ளம் வடிவதற்கு சில நாட்களாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

ஆஸி. சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை

– ஜே.ராஜன் – இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷெப், தெரிவிக்கையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கையிலுள்ள  ஏனைய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு இலங்கை சுற்றுலா அமைச்சினூடாக…

Read More

சீரற்ற காலநிலை : அமெரிக்கா, பாக்., ,ஆஸி., சீனா நாடுகளும் உதவி

நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உடனடி மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா,   பாகிஸ்தான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன. ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது நிவாரணப் பொருட்களை கப்பல்கள் மற்றும் விமானங்கள்  ஊடாக இன்று நாட்டுக்கு அப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா 50ஆயிரம் டொலர் நிதியை வழங்குதற்கு முன்வந்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேவையான உதவிகளை வழங்குவதற்கு…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம். பாதிகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபருடன் பேச்சு -சுஐப் எம் காசிம் – உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து விட்டு நேற்று (20) மாலை நாடு திரும்பினார். வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின்…

Read More

விண்வெளியில் பயிரிட காய்கறி செடிகள் உருவாக்கம்

விண்வெளியில் பயிரிடக் கூடிய காய்கறி செடிகள் உருவாக்குவது குறித்து நெதர்லாந்து பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களில் மனிதர்கள் குடியேறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று தங்குவதற்கான கனவு தொடங்கி அது நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் சென்று தங்கும் பட்சத்தில் அவர்கள் சாப்பிட காய்கறிகள் உற்பத்தி செய்ய செடிகள் உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கான ஆராய்ச்சியில் நெதர்லாந்து…

Read More

நிவாரணங்களில் ஈடுபடுவோருக்கு பொதுநலவாய அமைப்பு நன்றி

இலங்கையில் பெய்த கடும் மழைக்காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்காக பொதுநலவாயநாடுகள் அமைப்பு தமது இரங்கலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கேகாலையில் இடம்பெற்ற அனர்த்தங்கள் தமது கவலையை அளிப்பதாக பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுமேமுன்னிலை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பொதுநலவாய நாடுகளின் குடும்பம், மீட்புப் பணியாளர்களுக்கு தமது நன்றியைதெரிவிப்பதாகவும் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார்

Read More

ஜப்பானுக்கு செல்லும் மஹிந்த

உகண்டாவுக்கு அண்மையில் விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வசித்து வரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவிற்கு நெருக்கமானவர்கள், முன்னாள் ஜனாதிபதியை ஜப்பானுக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவர்கள் விமல் வீரவன்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை ஜப்பானுக்கு அழைத்திருந்தனர். ரோஹித்த அபேகுவர்தன…

Read More

ஜெயலலிதாவின் வெற்றிக்கான 6 காரணங்கள்

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே… கூட்டணி கணக்கு: தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும்,…

Read More

தபால் விநியோகம் சீர்குலைவு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தபால் திணைக்களத்தின் பணிகள் பெரும்பாலும் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத் தொடங்கியுள்ளன. நேற்று மாலை வரை சுமார் ஐந்து லட்சம் கடிதங்களும் பொதிகளும் தேங்கியிருப்பதாக தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சாதாரண தபால் பொதிகள் மட்டுமன்றி பதிவுத் தபால் பொதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது….

Read More

220 பேர் தொடர்பில், இதுவரை தகவல் இல்லை

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, அவர்களின் உறவினர்கள் மற்றும் துயர்பகிரச் செல்வோரும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரிய அழிவுகளை ஏற்படுத்திய…

Read More

மின்தடை தொடர்பாக 1987 இற்கு அழைக்கவும்!

மின் கம்பங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குறித்த இடங்களுக்கு அருகில் செல்லாமல் 1987 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் மின்தடை ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் குறித்த இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் எனவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தொழிநுட்ப பிரிவு இலக்கமான 1987 மற்றும் மின்சக்தி அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கமான 1901 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் குறித்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மின்தடை தொடர்பாக…

Read More