Headlines

வௌ்ள நீர் வடிகிறது

களனி கங்கைக்கு மேற் பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் களனி கங்கைக்கு கீழுள்ள பகுதிகளில் இன்னும் வௌ்ள நிலைமை காணப்படுவதோடு அதுவும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மற்றும் கங்கையின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே ஏதேனும் ஆபத்து நிலைமைகள் இருப்பின் காலதாமதம் இன்றி அதனை மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த திணைக்களம்…

Read More

அரநாயக்காவில் தொடர்ந்து நீடிக்கும் ஆபத்து

புளத்கொஹுபிட்டிய, அம்பலம பிரதேசத்திலுள்ள பல இடங்களிலும் வீடுகளிலும் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்புக் கோடுகள் விழுந்துள்ள நிலையில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதேவேளை, மண்சரிவு அபாயத்துக்கு இலக்காகியுள்ள ரணால, தெடிகமுவ மலையை அண்மித்த 13 குடும்பங்களையும் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன், அரநாயக்க பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, அம்பலம மலையும் நேற்றுச் சரிந்துள்ளது. இந்த அம்பலம மலையானது, அரநாயக்க சாமசர மலையின் மற்றுமொரு வளைவிலேயே அமைந்துள்ளது. இந்த…

Read More

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைபெற்றுக் கொள்வதற்காகவே அவர் நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்குஅழைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவும், யோசித்த ராஜபக்சவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அதிகபெறுமதியுடைய காணிகளை குறைந்த விலைகளுக்கு கொள்வனவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள்வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜீ –7 இல் கலந்து கொள்ள ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 25 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். ஜப்­பானில் இடம்­பெறும் ஜீ –7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி ஜப்பான் செல்­கிறார். இதன்­போது அம்­மா­நாட்டில் ஜீ–7 அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்­களைச் சந்­தித்து ஜனா­திபதி பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இம்­மா­நாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்­ளது. இதே­வேளை, ஜப்­பா­னியப் பிர­தமர் ஷின்சோ அபேயின் விசேட பிர­தி­நிதி இலங்கை வந்­த­தோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்துப்…

Read More

இலங்கையில் இயற்கை அனர்த்தம் – தலாய் லாமா இரங்கல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த இழப்புக்களுக்கு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இரங்கல் வெளியிட்டுள்ளார். உயிர் இழப்புக்கள் மற்றும் பாரியளவிலான அழிவுகள் போன்றவற்றுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களின் துன்பத்தில் பங்கேற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

கள மருத்துவமனை + மருத்துவர்களை, இலங்கைக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்குவதற்கு, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் வழங்கவுள்ள நிவாரண உதவியில், சத்திரசிகிச்சைக் கூடம், எக்ஸ்ரே வசதிகள், மற்றும் ஆய்வுகூடம் என்பனவற்றை உள்ளடக்கிய 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனை, மற்றும் மருந்துப் பொருட்கள், மின்பாக்கிகள், தார்ப்பாய்கள், கூடாரங்கள் உள்ளிட்ட…

Read More

அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதில் சிரமம்: நிதி அமைச்சு

இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ். அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய பொருளாதார ரீதியான மதிப்பீடுகளை மேற்கொள்வது மிகவும் சிரமமான காரியமாகும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றிய விபரங்களை துல்லியமாக திரட்ட முடியாதுள்ளது.இன்னமும் வெள்ளம் முழுமையாக…

Read More

மழை நீடித்தால் மண்சரிவு அபாயம் அதிகரிக்கும்!

மழை நீடித்தால் மண்சரிவு அபாயமும் அதிகரிக்கும் என தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மழை தொடர்ந்தும் பெய்தால் நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கண்டி, இரத்தினபுரி, கருணாகல், நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு…

Read More

வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது? – சட்டத்தரணிகள்

பாரிய போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வெலோ சுதாவிற்கு எதிரான வழக்கு அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக 17 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களை குவித்ததாகவும், இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது….

Read More

இன்று மீண்டும் மழை பெய்யும்!

நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று ஓய்ந்து காணப்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று முழுநாளும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் திணைக்களத்தின் நிரந்தர பிரதிநிதி மலிந்த மில்லன்கொட குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு இன்று மாலை 2.00 மணியின்…

Read More

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்?

-சுஐப் எம்.காசிம் – மல்வானை பிரதேசத்தில் உள்ள மல்வானை, லக்சபான, விதானகொடை, தோட்டம், காந்தியாவள, பள்ளம் ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை(22/05/2016) விஜயம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தாழ்நிலப் பிரதேசங்களையும் பார்வையிட்டார். அத்துடன் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். லக்சபான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழுமியிருந்த ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். “வெள்ளம் வரும்போது இந்தப் பிரதேசம்…

Read More

வெள்ள அனர்த்தம்: யாப்பா – றிஷாத் பேச்சு

இன்று காலை (22/05/2016) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, தான் அவதானித்த மக்கள் படும் கஷ்டங்களை அமைச்சரிடம் விவரித்தார். பாதிக்கப்பட்ட முகாம்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிகள் பலருக்கு முறையான நிவாரணங்கள் கிடைக்காமை தொடர்பிலும் அமைச்சர் யாப்பாவிடம் சுட்டிக்காட்டினார். பிரதேச செயலகங்கள் இந்த மக்களின் விடயங்களில் நேரடிக் கவனம் செலுத்தும் வகையில் உரிய அதிகாரிகளையும், அலுவலர்களையும் அந்த இடங்களுக்கு அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை சீர்படுத்துமாறு வேண்டினார்….

Read More