Headlines

மலையகத்திற்கான ரயில் சேவை இடைநிறுத்தம்

மழை காரணமாக இஹல கோட்டே மற்றும் பலன ஆகிய இடங்களில் ரயில் பாதை (தண்டவாளம்) கீழிறங்கியுள்ளதால் கண்டி மற்றும் ரம்புக்கனே ஆகிய பிரதேசங்களுக்கிடையேயான ரயில் சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. ரயில் பாதை கீழிறங்கியுள்ளதால் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, பதுளை நோக்கிச் செல்லும் புகையிரதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலும் இடைநடுவில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம்…

Read More

மாணவர்களுக்கு உதவுங்கள் : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணங்களை சேகரிக்கும் பணியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் 011 27 86 384, 071 23 65 965, மற்றும் 071 83 87 212 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரணப்பொருட்களை வழங்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்களுக்கான நிவாரணப்பொருட்களை நேரடியாக வழங்க விரும்புபவர்கள் பெலவத்த, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாகவுள்ள நிவாரண சேகரிப்பு பகுதிகளில் கையளிக்க முடியும்…

Read More

2 போர்க் கப்பல்களில் வரும், இந்தியாவின் உதவிகள்

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து, ஐஎன்எஸ் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மற்றும், ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கப்பலில் ஆகியவற்றில், இந்தியாவின் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கடற்படைக் கப்பல் ஏற்கனவே கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஐஎன்எஸ் சுகன்யாவில்…

Read More

3 லட்சம் பேர் இடம்பெயர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் 62,000 குடும்பங்களைச் சேர்ந்த 300,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் இடம்பெயர்ந்தவர்களுக்காக 611 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 3500 வீடுகள் முழுமையாகவோ பகுதியளவோ சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதோடு 132 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

Read More

 ‘சண்டியர்களை போல சத்தம் போட முடியாது’

55 மில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்புத்தொகை தொடர்பிலான பிரேரணை, நேற்றைய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘சபையில் சத்தம் போட்டு, சண்டியர்களைப் போல செயற்பட முடியாது’ என்று கடுந்தொனியில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்;று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சபை தினப்பணிகளுக்கு நகர்த்தப்பட்டது.

Read More

3 மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து

மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர்…

Read More

வெள்ள அனர்த்தம் தீவிரம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் ஏற்­பட்ட அனர்த்த நிலை­மைகள் தொடர்­பாக மக்கள் பிர­தி­நி­திகள் கவனம் செலுத்த வேண்­டி­யதன் கார­ண­மாக நேற்று (19) வியா­ழக்­கி­ழமை சபை நட­வ­டிக்­கைகள் நண்­பகல் 12.10 மணி­யுடன் ஒத்தி வைக்­கப்­பட்­டன.

Read More

கட­லுக்கு சென்ற மீன­வர்கள் இருவர் 20 நாட்­க­ளா­கியும் வீடு­ சே­ர­வில்லை

திரு­கோ­ண­மலை மாவட்டம் திருக்­க­டலூர் மற்றும் பள்­ளத்­தோட்டம் பகு­தி­களைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கட­லுக்குச் சென்ற நிலையில் இன்­றுடன் 20 நாட்­க­ளா­கியும் தமது வீடு­க­ளுக்கு வந்து சேர­வில்லை. இவர்கள் கட­லுக்குச் சென்ற பட­­கினை கடலில் கண்டு மீட்ட போதும் இவர்­களின் தகவல் தெரி­யாத நிலையில் பெற்றோர் தேடி வருகின்றனர்.

Read More

படகுச் சேவைக்கு பணம் செலுத்த வேண்டாம் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள படகு சேவைகளுக்கு பொதுமக்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது, வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தனியார் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சகல படகுகளுக்குமான கொடுப்பனவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமே வழங்குகின்றது.

Read More

மழையும், காற்றும் தொடரும் – வானிலை அவதான நிலையம்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த ரோனு சூறாவளி காங்கேசன்துறைக்கு வடக்கே 900 கிலோமீ்ற்றர் தொலைவில் வடக்கு நோக்கி இலங்கையை தாண்டி செல்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலான மழை வீழ்ச்சியை ஏற்ப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மழை பெய்வதுடன், கடலோரங்களில் காற்றுடன் மழையும்…

Read More

குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறும்!

குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறTள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

Read More

இலங்கைக்கு அவசர உதவிகளை அனுப்ப மோடி உத்தரவு

இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் உடமைகளுக்காகஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர உதவிகளை இலங்கைக்குஅனுப்பி வைக்கவும்; அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் மோடி அறிவித்துள்ளார்.

Read More