Headlines

வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு




களுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 13,000 இற்கும் மேற்பட்டோர் 169 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மழையுடன் கூடிய வானிலையால் முற்றாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *