Headlines

ரணவிரு ஞாபகார்த்த விழா ஜனாதிபதி தலைமையில்!

தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் எதிர்வரும் 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள படைவீரர்கள் ஞாபகார்த்த திடலில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். மேற்படி நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார நிகழ்வுகளையடுத்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து…

Read More

உயர்தரப் பரீட்சையை ஏப்ரலுக்கு மாற்றுவது குறித்து பேச்சு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதே இதன் நோக்கமாகும். தற்பொழுது நடைமுறையில் உள்ளவாறு ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக புதிய மாணவர்கள் சுமார் ஒரு வருடமும் 8 மாதங்களும் காத்திருக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில் குறித்த பரீட்சையை நடாத்தினால்…

Read More

போரில் உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூர தடையில்லை!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு எந்தவித தடையுமில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்கான நினைவஞ்சலி நிகழ்வு (தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016) தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,…

Read More

பாதுகாப்பாளர்களில் அல்லாஹ்வே மேலானவன்

– ஜெஸிலா பானு – பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன். கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிகக் கிருபையாளனாவான். காலச்சக்கரம் வெகுவேகமாகச் சுழன்று வளமையான ஏழு ஆண்டுகள் கழிந்து, வறட்சி ஆரம்பமானது. சாம்ராஜ்யத்தின் நிதி அமைச்சர் யூசுப் (அலை) அவர்களின் கட்டுப்பாட்டில் சாகுபடி, அறுவடை, பயிர்களின் சேமிப்பு என்று வளமையான ஏழு வருடங்கள் நல்ல முறையில் சென்றதால், வறட்சியிலும் அவர் பகுதி மக்கள் நிம்மதியாக வளமாக இருந்தனர். பஞ்சம், பற்றாக்குறை சுற்றுவட்டாரங்களிலும் பரவி யூசுப் (அலை) அவர்களின் சொந்த…

Read More

அந்நிய செலாவணி அதிகரிப்பு!

வெளிநாட்டில் வேலை செய்வோரினால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 வீதத்தில் அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 523.50 மில்லியன் அமெரிக்க டொலாராக இருந்த அந்நிய செலாவணி இந்த ஆண்டு 563.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 58,726 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர். இவர்களில் 38,677 ஆண்களும் 20,049 பெண்களும்…

Read More

பாசிக்குடாவில் மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறி!

பாசிக்குடாவில் சுற்றுலாத் துறையினை விருத்தி செய்யுமுகமாக சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கான மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறியொன்று நேற்று(12) பாசிக்குடா அமெயா வீச் சுற்றுலா விடுதியில் ஆரம்பமானது. சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ அமைச்சின் கீழ் உள்ள இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இப்பயிற்சிக் கருத்தரங்கானது நேற்று ஆரம்பமாகி இன்று(13) மற்றும் நாளை(14) என மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

Read More

ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின்  கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Read More

ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கான இருநாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று  (13) புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா கலாசார நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும். இதனை அடுத்து சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள…

Read More

யோஷித வாக்குமூலமளிக்க வந்தார்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை (13) காலை வருகை தந்துள்ளார். முன்னதாக கடந்த புதன்கிழமையும் யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலமளித்திருந்தார்.

Read More

 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவி உயர்வு

– கனகராசா சரவணன் – பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உதவி பொலிஸ்மா அதிபாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது இதங்கமைய, அஜந்த சமரகோன், ரண்மல் கொடித்துவக்கு, நானகசில்வா, கிஸ்சிறிஜெயலத், ராஜித சி சமிந்த, சஞ்சீவ தர்மரத்தின மற்றும் பியந்த வீரசூரிய ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

Read More

ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் எங்கிருந்தாலும் மீட்டெடுக்கப்படும்

ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார். நாட்டிலிருந்து சொத்துக்களை திருடிச் சென்றவர்களை கண்டுப்பிடிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான கூட்டு சர்வதேச மையம் ஒன்றை அமைப்பதற்கு மாநாடு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியைடைவதாக தெரிவித்த அவர், ஊழலை…

Read More

சஜின் வாஸின் வீடு சீஐடியினரால் சோதனை!

கொழும்பு, பொரளையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் வீடுநேற்று சீஐடியினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது. இதன்போது பணச்சலவை தொடர்பில் சீஐடியினர் பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர். 2011,2012ம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற அடிப்படையில் லஞ்சஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More