Headlines

ஒபாமாவை சந்திப்பார் மைத்திரி

ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில்  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ௪ப்பானின் ஷிமா நகரில், மே மாதம் 26, 27 ஆம் திகதிகளில், ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி…

Read More

தெற்கு அதிவேக பாதையின் மூலம் பாரிய வருமானம்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை மட்டும் பயணித்த 57,023 வாகனங்கள் மூலம் 17.7 ரூபா மில்லியன் பாரிய வருமானம் கிடைத்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More

சாரதிகளுக்கு ஓர் எச்சரிக்கை.!

வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சாரதிகளுக்கு புள்ளியிடும் நடைமுறை இந்த வருடம் முதல் அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளியிடும் நடவடிக்கைக்கு ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடைமுறை சிக்கல்களை சரி செய்துக் கொண்டு இந்த ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். புள்ளியிடும் நடைமுறையின் ஊடாக சாரதிகளினால் இழைக்கப்படுகின்ற தவறுகளுக்கு புள்ளிகள் இடப்படுவதுடன், அந்த புள்ளி…

Read More

விரைவில் சுரங்கப்பாதை நிர்மாணம்.!

நீண்ட காலமாக கண்டி நகர பிரதேசங்களில் நிலவி வரும் வாகன நெருக்கடிகளைப் போக்குவதற்கு விரைவில் தென்னக்கும்பர பிரதேசத்திலிருந்து கெட்டம்பே வரையில் சுரங்கப்பாதை ஒன்றினை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்‑ ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Read More

938 பேர் வைத்தியசாலையில்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் காயமடைந்த 938 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பயிற்சிப் பிரிவின் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா கூறினார். எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் கூறினார்.

Read More

கொழும்பு வருவதற்கு மேலதிக சேவை.!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்கு மீண்டும் செல்வதற்காக மேலதிக பஸ் சேவையை இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், சொந்த இடங்களுக்கு சென்ற பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட புகையிரத சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. பஸ் சேவைகளில் எவ்வித பிரச்சினைகள் காணப்படுமாயின்  1955, 011 1333…

Read More

அமெரிக்கா கடற்படையுடன் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி

இலங்கை கடற்படையினரும் அமெரிக்கா கடற்படையினரும் இணைந்து கூட்டு பயிற்சியிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப் கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படையில் 20 பேர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் போது இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை நீக்குவது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

களைக்கட்டும் கச்சத்தீவு

இந்தியாவில் தமிழக தேர்தல் களத்தில் இலங்கை கச்சத்தீவு விவகாரம் மீண்டும் தீவிரமாகியுள்ளது.  தமிழக முதல்வர் ஜெயலிலதா ஜெயராம் கடந்த தினம் அறுப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் கச்சத்தீவின் அதிகாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கமே இலங்கைக்கு தாரை வார்த்ததாகவும் அத்துடன் கச்சத்தீவினை மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் தமிழக முதல்வர் ஜெயலிலதா கூறியதை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துள்ளது. கச்சத்தீவானது, தமிழகத்தில் அவசரகாலநிலைமை அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும், இதற்கும்…

Read More

இலங்கைக்கு பங்களாதேஷ் எதிர்ப்பு

இலங்கை பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்த விடுத்த கோரிக்கைக்கு  பங்களாதேஷ் அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இலங்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பினை விஸ்தரிப்பதற்காக அனுமதி கோரியிருந்த நிலமையில்  அக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை விடுத்திருந்த கோரிக்கையில் பங்களாதேஷின் கடற்பரப்பின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாகவும்  இவ்வாறு கடற்பரப்பினை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என பங்காளதேஸ் அறிவித்துள்ளது. தமது கடல் எல்லையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை…

Read More

அதிக கட்டணம் வசூலித்த பேரூந்து நடத்துனர்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்பட்டிருந்த விசேட பேரூந்து ஒன்றில் அசாதாரணமான முறையில் பயணிகளிடம் இருந்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கண்டி – ஹட்டன் வீதியில் பயணித்த பேரூந்து ஒன்றிலேயே இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக கண்டியிலிருந்து கினிகேத்தனவிற்கு 68 ரூபா அறவிடப்படும் எனினும் இப்பேரூந்து நடத்துனர் 250 ரூபா கேட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Read More

ஐந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஐந்து இலங்கையர்களை சேர்பியாவுக்கு ரொமானியாவிலிருந்து கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ரொமானிய குடிவரவுத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். ரொமானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றமையால் குறித்த ஐந்து இலங்கையர்களும் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் 20 முதல் 24 வயதுகளை உடையவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

3 கிலோ கஞ்சா போதைப் பொருட்களுடன் இருவர் கைது

கஞ்சா போதைப் பொருட்களுடன் நேற்று இரவு கிளிநொச்சியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் அவர்கள் 3 கிலோ வரையிலான போதைப் பொருட்களை இரண்டு பொதிகளில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். கைதானவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதேநேரம் கிளிநொச்சி நேற்று…

Read More