Headlines

தமிழக தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (29) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி  வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 2,112 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த 233 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பிரிசீலனை எதிர்வரும் 30 ஆம் திகதி  நடைபெறுகிறது. மே 2 ஆம் திகதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, இறுதி வேட்பாளர்…

Read More

தம்மாலோக தேரர் விவகாரம் – விசாரணைகள் நிறைவு

உடுவே தம்மாலோக தேரர் அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை தன்னகத்தே வைத்திருந்தமை தொடர்பிலான, விசாரணை நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இன்று குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும், விசாரணை குறித்த அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அவர்கள், சட்ட மா அதிபரின் அறிவுரை கிடைக்கப்பெற்றதும், உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் நீதிமன்றத்தில்…

Read More

‘ஒன்றிணைந்த எதிரிணியென அழைக்கவேண்டாம்’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சார்பான அணியினரை, ஒன்றிணைந்த எதிரணி என அழைக்கவேண்டாமெனவும், அவர்கள், உண்மையான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது. tm

Read More

ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரன் அமைப்பாளராக நியமனம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவராகவே ஜே.ஆரின் பேரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது

– சுஐப் எம் காசிம் – யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்குமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் தமது பிரதேசத்திற்கு மீள் குடியேறச் சென்றுள்ள யாழ் முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற…

Read More

தாய்லாந்து முப்படை தலைமை அதிகாரி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

தாய்லாந்து ரோயல் ஆயுதப்படைகளுக்கான பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை நேற்று (27) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். ஜெனரல் சொம்மை காவ்டிரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வெவ்வேறு சந்திப்புகளின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு…

Read More

விருசர அட்டை பயனாளிகளுக்கு மேலும் நன்மைகள்

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருந்துகள் அமைச்சின் தலைமையில் விருசர அட்டை பயனாளிகளுக்கு சகல அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் துறைகளில் முன்னுரிமைகள் மற்றும் சிகிச்சைகள் (மருத்துவ, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், கண், கர்ப்பகால மருத்துவ சோதனை உள்ளிட்ட பல சேவைகள்) வழங்கப்படவுள்ளன. இதன்பிரகாரம், அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் மேற்படி விடயம் சம்பந்தமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விருசர அட்டை பயனாளிகள் பல்வேறு வகையான சலுகைகள் மற்றும்…

Read More

அதிகாரப் பகிர்வும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் (கட்டுரை)

– எம்.ஐ.முபாறக் – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டனர். புதிய அரசமைப்பில் இருக்க வேண்டிய ஏனைய விடயங்களை விடவும் அதில் உள்ளடங்கப்போகும் அரசியல் தீர்வின் மீதுதான் சிறுபான்மை இன மக்களின் முழுக் கவனமும் உள்ளது.எப்படியாவது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்காக இருக்கின்றது. இந்த நாட்டின் மூவின…

Read More

வெனிசுவேலாவில் கடும் மின் தட்டுப்பாடு – வேலை நாட்கள் குறைப்பு!

வெனிசுவேலாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது. மின்சாரப் பிரச்சினை தீரும் வரை அரசு ஊழியர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மாத்திரமே வேலைக்கு வரவேண்டும் என துணை ஜனாதிபதி அரிஸ்டோபுலோ இஸ்துரிஸ் தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடி காரணமாக சுமார் இருபது லட்சம் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை…

Read More

பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைவு!

சுதந்திரக் கூட்டணியின் மே தின கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறுமுகம் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரபா கணேசன் ஆகியோர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச்…

Read More

கீதா, சாலிய பதவி நீக்கம் – 11 பேருக்கு புதிய பதவிகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு, கம்பஹா மாவட்ட அமைப்பாளர் –…

Read More

அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

– ஏ.பி.மதன் – நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினைக் கவிழ்க்கும் மாற்றுச் சக்திகளின் கனவு, ஒருபோதும் நனவாகாது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் ஊடகங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (27) புதன்கிழமை சந்தித்து  நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குப் பற்றி விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More