Headlines

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

இந்­திய கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் திரு­ம­ணத்தில் ரசம் இல்­லா­ததால் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. கர்­நா­டக மாநிலம் தும்கூர் மாவட்­டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகு­தியைச் சேர்ந்த பிர­காசம் – சௌபாக்­கி­யம்மா தம்­பதிகளின் மகள் சௌமியா. இவ­ருக்கும் ஸ்ரீரா­ம­புரம் திம்­மை­யம்மா மகன் ராஜு­வுக்கு குனிக்கல் கிரா­மத்தில் நேற்­று­முன்­தினம் திரு­மணம் நடப்­ப­தாக முடி­வா­னது. திரு­ம­ணத்­துக்கு முதல் நாள் இரவு திரு­மண வர­வேற்பு விருந்து இடம்­பெற்­றுள்­ளது. மண­மகன் ராஜு தனது குடும்­பத்­தி­ன­ருடன் மிக தாம­த­மாக மண்­ட­பத்­துக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து உடனே…

Read More

தண்டனை அனுபவிக்கத்தயார் ;மஹிந்த

தவறு செய்­தி­ருந்தால் தண்­டனை அனு­ப­விக்கத் தயார் என்றும் மக்கள் அர­சாங்­கத்தின் மீது கொண்­டுள்ள வெறுப்பை தமது குடும்­பத்தார் மீது காண்­பிக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார் நேற்று காலை கண்டி தலதா மாளி­கைக்குச் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்­டதன் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இன்னும் சில நாட்­களில் என்­னையும் அழைப்பர். நாம­லையும் அழைப்பர். பஸில், மற்றும் கோத்தபாய ஆகி­யோ­ரையும் அழைப்பர். நல்­லாட்­சியை…

Read More

ஜனநாயகக் கட்சி, ஐ.தே.க.வுடன் நாளை இணையும்

பீல்ட் மார்ஷல்  பொன்சேகாவின் தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சி, நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

தேர்தல் கோரி நீதிமன்றம் செல்லும் மஹிந்த

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். உடனடியாக இந்த தேர்தலை நடத்துமாறு கோரப்படுகிறது. ஆனால் இது திட்டமிட்டே பிற்போடப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடி அதனை நடத்த செய்யவிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

Read More

கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் காலமானார்

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் மற்றும் பல சமூக அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினருமாகிய முத்தையா கதிர்காமநாதன் இன்று (2) காலை காலமானார். இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.  

Read More

ராஜபக்ஸகளின் கண்ணீர் தொடர்பில் அப்சரா பொன்சேகாவின் கருத்து

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை…

Read More

மின்னஞ்சலை மையப்படுத்திய விசாரணையிலேயே யோஷித்த சிக்கினார்

சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்ய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சல் ஆதாரங்களே பிரதானமாக இருந்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். சி.எஸ்.என். நிறுவனத்தின் தீர்மானங்கள் எடுக்கும் ஏக நபராகவும் தலைவராகவும் யோஷித்த ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார் என்பதை அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சலை விஷேட ஆய்வுகளுக்கு உட்படுத்திய போதே…

Read More

சிறைச்சாலை உணவை மறுத்த யோஷித

சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (1) முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும்  அவர்களின் கோரிக்கை படி வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

Read More

பாகிஸ்தான் – இலங்கை உறவு மிகச் சிறந்த வகையில் உள்ளது

இலங்கையுடனான உறவுகள் மிகச் சிறந்த வகையில் காணப்படுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சயிட் சகீல் ஹூசைன், இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்ள இரு தரப்பும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் புத்திஜீவிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இவ்வாறான இரு தரப்பு விஜயங்கள் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை…

Read More

தவறை உணர்ந்த மஹிந்த!

தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, தனது மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டியில் வைத்து நேற்று முன்தினம் (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பணம், இலங்கையில் முதலிடுவதற்கு தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன….

Read More

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பாரிய வாகன நெரிசல்

புதிய போக்குவரத்து நடைமுறைகள் அறிமுகம் செய்துள்ளமையால், கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனடிப்டையில் கொழும்பு புறக்கோட்டையை நோக்கி செல்லும் வாகனங்கள் சற்றும் நகர முடியாத வகையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தை, பம்பலபிட்டி, கொள்ளுபிட்டி ஆகிய பகுதிகளிலும் காலி வீதியிலும் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்போது அதிக வாகன நெரிசல் காணப்படுகின்றமை…

Read More

சிங்கள ராவய அமைப்பின் செயலாளருக்கும் விளக்கமறியல்

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்த தினத்தில் (26), அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்திய சந்தேக நபர்களான பிக்குகள் இருவர் நேற்று (01) ஹோமாகம பொலிஸில் சரணடைந்தனர்.   குறித்த இருவரில், சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரரும் ஒருவராவார்.குறித்த இருவரையும் வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More