Headlines

உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்- மஹிந்தவுக்கு அறிவுரை

தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உங்களது மகன், யோசித்த ராஜபக்ச குற்றவாளியா? குற்றமற்றவரா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனினும் மகன் கைது செய்யப்பட்டமைக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்த வேண்டாம் என்று துலாஞ்சலி…

Read More

இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி வீதியில், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பகுதி மற்றும் சைத்திய வீதியிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் காலி முகத்திடல் சுற்றுவட்டம்…

Read More

சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு மாற்றம்

அண்மையில் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் இரண்டு பௌத்த பிக்குகளும் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில்…

Read More

ட்ரம்பை வென்றார் டெட் குருஸ்

அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்­கான வேட்­பாளர் தெரிவின் முதற்­கட்ட தெரிவில் டொனால்ட் ட்ரம்பை தோற்­க­டித்து  டெட் குருஸ் வெற்றி பெற்­றுள்ளார். அமெ­ரிக்­காவின் அயோவா பகு­தியில் நேற்று முன்­தினம் வேட்­பாளர் தெரிவின் முதற்­கட்ட வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இதில் குருஸ் 27.7 சத­வீத வாக்­கு­க­ளையும், டிரம்ப் 24.3 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றனர். அவர்­க­ளுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23.1 சத­வீத வாக்­குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்­துள்ளார். இதனால் டெட் குரூஸை குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விப்­பதில் எவ்­வித சிக்­கலும்…

Read More

பெப்.6இல் வருகிறார் ஹுஸைன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், எதிர்வரும் சனிக்கிழமை (06) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சிறுவனின் சடலம் மீட்பு: சிறுவன் கைது

திருகோணமலை சம்பூர் பகுதியில் பாழடைந்த கிணற்றொன்றிலிருந்து 6 வயதான சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 15 வயதான சிறுவனை சந்தேகத்தின் பேரில்  இன்று (02) பகல்; கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

எம்பிலிப்பிட்டிய விவகாரம்: ஏ.எஸ்.பி கைது

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர்.   இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு ஆறு நாட்களுக்கு பின்னரே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள்

உலகின் முதன் முதலாக ஊழியர்களுக்கு பதிலாக முற்று முழுதாக தன்னியக்க ரோபோக்களை வைத்து தாவர பண்ணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய தொழிற்சாலையொன்று நேற்று (1) அறிவித்துள்ளது. கயோட்டோ பிராந்தியத்தில் கமியோகா நகரிலுள்ள மேற்படி தொழிற்சாலையானது கீரை வகையான இலைக்கோசு தாவர செய்கையை மேற்கொள்வதற்கான இந்த ரோபோ பண்ணையை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் நிர்மாணிக்கவுள்ளது. 47,300 சதுர அடி பரப்பளவில் செயற்படவுள்ள இந்தப் பண்ணையில் ரோபோக்கள் தாவர விதைகளை நாட்டுதல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் அறுவடை செய்தல்…

Read More

12 தங்க பதக்கம்பெற்று, முஸ்லிம் மாணவி சாதனை!

லக்னோவிலுள்ள பல்கலைகழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவியான சானியா அஹமது பல்வேறு துறைகளில் வெற்றிப்பெற்று சாதனை படைத்து நேற்று(1)  12 தங்க பதக்கம் பெற்றுள்ளார். இஸ்லாம் உடலுக்கு மட்டுமே திரையிடுகிறது அறிவுக்கு அல்ல… சகோதரி சானியா இன்னும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க இறைவன் அருள் செய்வானாக..

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினர் ஒத்திகை

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்திற்கான முப்படையினரின் ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பின் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ராஜபக்சவிற்கு ஆதரவாக குரல் எழுப்ப தயார்: மேர்வின் சில்வா

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிராமத்தில் பிறந்தவன் என்ற விதத்திலேயே தான் கவலையடைவதாக முன்னணி வானொலியொன்றின் நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது கவலையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கவில்லை எனவும், தேர்தலுக்கு பின்னர் தான் இதுவரை அவருடன் கதைக்கவில்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு முரணான வகையில் ராஜபக்ச குடும்பத்தாரை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால், தான் அதற்கு…

Read More

இலங்கை யுவதியால் விராட் கோஹ்லிக்கு அவமானம்

சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் இக்கட்டான நிலைமை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்காக அந்த நாட்டில் இந்திய அணி தற்போது தங்கியிருக்கும் நிலையில் கோஹ்லி தனது முகாமையாளருடன் அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றிட்கு காலை உணவை உட்கொள்ளச் சென்றிருந்தார். அவ் வேளையில் அங்கு வருகை தந்திருந்த இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் கோஹ்லியுடன்…

Read More