Headlines

திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் சத்தியபிரமாணம்

சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் தேவை கருதி திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் நியமனம் பெற்றுள்ளனர். நோர்வூட் பொதுசுகதார பரிசோதகர் கே.ஜெய்கணேசன், மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் பீ.கே.விஜேவீர அம்பகமுவ, பீ.கே.எல்.வசந்த பொகவந்தலா பொது சுகாதார பரிசோதகர் பொகவந்தலா ஆகிய மூவரே நேற்று ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜ.பீ.டீ லியனகே முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.

Read More

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

– K.Kapila – இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய  வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் (12) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐ.நா. அதிகாரிக்கு முன், துணிச்சலை வெளிப்படுத்திய றிஷாத்

இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப்  பாதுகாத்தவர்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக்  காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை…

Read More

சிராஸ் மீராசாஹிப் நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்

– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனால் நேற்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. அத்தோடு அமைச்சில் அமைந்துள்ள அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை சிராஸ் மீராசாஹிப் பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பதவியானது கைத்தொழில் மற்றும் வணிக…

Read More

ஹிருணிகா பிணை பெறுவதில் கின்னஸ் சாதனை

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறுகிய கால இடைவௌியில் பினையில் விடுவிக்கப்பட்டமையானது, புதிய கின்னஸ் சாதனை என, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “ஹிருணிகா விரைவாக சிறை சென்று விரைவாக வௌியே வருவார்” என தான் முன்னரே கூறியதாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பேராசிரியர் நாலக கோடஹேன பல நாட்களாக சிறையில் இருக்கையில், ஹிருணிகா குறுகிய காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டமை கின்னஸ் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (11)…

Read More

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அரசடியில் இப்போராட்டம் இடம்பெற்றது. மாவட்ட எம்.பீ.வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

Read More

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்!

நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். வழக்கு முடிந்து சிறைச்சாலை வாகனத்தில் சந்தேகநபர்கள் ஏறியபோது, ஊடகவியலாளர்களை தமது அருகில்…

Read More

குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி – மைத்திரி

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஸ்ரீ போதிராஜா விகாரையில் ஆரம்பமான நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றிய பொழுதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிசலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஏதுக்கள்…

Read More

மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்!

காலி பிரதேச பாடசாலையொன்றில் இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று (11) முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. காலி பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலினைத் தொடர்ந்து படுகாயமடைந்த ஆசிரியர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே மாணவர் அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பிலான விசாரணைகளை அக்மீமன பொலிஸார்…

Read More

மிஹின் லங்கா விமானம் பறப்பதை 6 மணிநேரம் தாமதப்படுத்திய எலி!

– ஆர்.கிறிஷ்­ணகாந் – கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் (9) காலை மதுரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்­த­மான என் 3001 என்ற விமானம் புறப்­ப­டு­வ­தற்கு 6 மணித்­தி­யா­லங்கள் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. விமா­னத்­திற்குள் எலி­யொன்று புகுந்­துள்­ள­தாக பய­ணி­யொ­ருவர் விமானப் பணி­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்­த­த­னை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த பய­ணிகள் அனை­வரும் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். விமான நிலைய பொறுப்­பா­ளர்கள் எலியை விமா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு ஏறத்­தாழ 6 மணித்­தி­யா­லங்கள் வரை சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பின்னர் முற்­பகல் 7.30 மணிக்கு…

Read More