Headlines

முசலி பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை

– எஸ்.எச்.எம்.வாஜித் – மன்னார்-முசலி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் நலன் கருதி இன்னும் ஓரு சில மாதங்கள் அல்லது வருடத்தில் அணைத்து வசதிகளுடன் கூடிய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை ஒன்றினை அமைத்து தருவதாக நேற்று மாலை இடம்பெற்ற  வன்னி  விடியல் சமூகவலை தள கலந்துறையாடல் குழுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இப்படியான சமூக நல திட்டங்களை மக்கள் மத்தியில்…

Read More

ரணில்- மோடி சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Read More

ஆஸி.பிரதமர் அபாட் அவுட் : புதிய பிரதமராக டர்ன்புல்

அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைமை போட்டியில் தோல்வியடைந்த டோனி அப்போட் பிரதமர் பதவியை இழந்த தோடு அந்நாட்டுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இழுபறி நீடித்த லிபரல் கட்சியின் தலைமைக்காக நேற்று நடத்தப்பட்ட அவசர வாக்கெடுப்பில்அப்போட் அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினரான மல்கம் டர்ன்புல்லிடம் தோல்வியடைந்தார். ஏற்கனவே மோசமான கருத்துக் கணிப்பை பெற்றிருந்த அப்போட் கட்சி உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பில் 44 வாக்குகளையே வெல்ல முடிந்தது. டர்ன்புல் 54 வாக்குகளை வென்று…

Read More

மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் : அனு­ர­கு­மார

இறுதி யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­பாகும். குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். எனினும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடு­மை­யா­ன­தாக அமையும் என செய்­திகள் வெளி­வந்­துள்ள நிலையில் இலங்­கையின்…

Read More

25இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

நக­ரங்கள், கிரா­மங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்கும் பொறுப்­பி­னை தன்­னிடம் முன்­னெ­டுக்­கு­மாறு பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பணித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ வீட்டுப் பிரச்­சி­னை­களை கண்­டறிய ஒவ்­வொரு பிர­தேச மாவட்ட மட்­டத்தில் நட­மாடும் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் தெரி­விக்­கையில், இலங்­கையில் நாளொன்­றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்­பங்கள் நிரந்­தர வீடுகள் இல்­லாது பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்­றன. இந்­தப் ­பா­ரிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான மிகப்­பெரும் பொறுப்பை…

Read More

அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு

அடுத்த ஐந்து வரு­ட ­கா­லத்தில் மிகவும் துன்­ப­க­ர­மான தோட்­ட­ப்புற லயம் வாழ்க்­கைக்கு முடி­வு கட்­டி­விட்டு அனைத்து வச­தி­க­ளு­டனும் கூடிய மலை­ய­கத்தில் புதிய கிரா­ம­ங்களை உரு­வாக்­க­வுள்ளோம் என மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் பி. திகாம்­பரம் தெரி­வித்தார். முன்­னைய ஆட்­சியின் போது மலை­ய­கத்­திற்கு எந்­த­வொரு அபி­வி­ருத்­தியையும் கொண்­டு­வ­ராத அரா­ஜகப் போக்­கி­லான அர­சி­யலை நாம் மீண்டும் தொட­ரப்­போ­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ராக நேற்று கட­மை­களை பொறுப்­பேற்­றதன்…

Read More

சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசா­ர­ணைகளை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. இலங்கை குறித்த சர்­வ­தேச தலை­யீ­டு­களை இலங்கை அர­சாங்கம் சரி­யான முறையில் கையாளும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். தவ­றி­யேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் தொடர்ந்தும் மஹிந்­தவின் ஆக்­கி­ர­மிப்பில் நாடு இருந்­தி­ருந்தால் எமது இரா­ணுவ வீரர்கள் நிச்­ச­ய­மாக சர்­வ­தேச நீதி­மன்றில் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது…

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…

Read More

கம்பஹா முக்கொலை : சந்தேக நபர் கைது

கம்பஹா – உடுகம்பொல, தெவலபொல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலம் மீட்கப்பட்டதுடன் சிறுமியின் சடலம் வீட்டிற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பசியாலை பிரதேசத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்தனர். பொலிஸார்…

Read More

ஊவா முதலமைச்சராக சாமர சம்பத் சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ண்டார். இவர் ஊவா மாகாண முதலமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி

-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி நேற்று (திங்கள் கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம் பெற்றது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்…

Read More

ஞானசார தன்னுடைய இனப்பற்றை நிரூபிக்க முன்வருவாரா?

-முஹம்மது நியாஸ்- கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் சர்வதேசமே நன்கறிந்த ஒன்றாகும். இது மாத்திரமல்லாது இப்பயங்கரவாதிகளால் இஸ்லாமிய சமூகத்தின் மீது சுமார் நான்கு வருடங்களாக திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற அத்தனை வன்முறை சார் செயற்பாடுகளுக்கும் “இலங்கை நாட்டில் பௌத்த மதம் இஸ்லாமியர்களால் களங்கப்படுத்தப்பட்டு வருகிறது” என்ற பொதுபல சேனா அமைப்பின்…

Read More