Headlines

மாதுலுவாவே சோபித தேரரின் கடைசி ஆசை?

காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் கடைசி விருப்பம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நான் மரணித்த பின்னர் பெறுமதிமிக்க சவப்பெட்டி, வீதி ஊர்வலம், கொடிகள், பெறுமதிமிக்க சுடலை போன்றன இருக்கக் கூடாது. உயிரிழந்து 24 மணித்தியாலத்திற்குள் என்னை தகனம் செய்ய வேண்டும் என காலம் சென்ற சோபித தேரர் சிங்கள ஊடகமொன்றுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் வழங்கியிருந்தார். 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி பிரசுரமான வார இறுதிப் பத்திரிகையில் இந்த…

Read More

அரசியல் கைதிகளுக்கு இன்று முதல் பிணை

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாட்­டுக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்கக் கூடாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாடு இடம்­பெறும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்­த­நி­லையில் இவ்­வி­டயம் குறித்து தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிர­தமர் ரணில்…

Read More

இன்று விசேட கூட்டம்

எவன் கார்ட் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று புதன்­கி­ழ­மையும் விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளது. கலந்­து­ரை­யா­டலில் பாது­காப்­புத்­து­றையை சார்ந்த தரப்­பினர் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் சிலரும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொள்­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று முன்­தினம் இடம்­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே இவ்­வாறு இன்­றைய தினம் கலந்­து­ரை­யா­டலை நடத்­து­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. மேலும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என இந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூறி­யி­ருந்தார்….

Read More

அனுர குமார கூறு­கின்றார் என்­ப­தற்­காக பத­வி விலக முடி­யாது

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வதைப் போன்று முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால், சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எவன்ட் கார்ட்…

Read More

காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

– பி.எம்.எம்.ஏ.காதர் – கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்துள்ளனர் இது விடயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண மக்களை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் வனவளத்துறை அமைச்சர் யவிக்ரம பெரேராவிடம் எழுத்து மூலமான…

Read More

மியன்மார் தேர்தல்: தோற்றதும் பேய் வென்றதும் பேய்?

13 மில்லியன் முஸ்லிம்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் மியன்மாரில் இடம்பெற்ற தேர்தலில் ஆங்சாங் சூயி தலைமையிலான எதிர்க் கட்சி வெற்றியீட்டி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறும் என ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளைக் கொண்டு எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அமைதிக்காக நோபல் விருது வென்ற ஆங்சாங் சூயின் முஸ்லிம் சிறுபான்மை மீதான அடக்குமுறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்காததுடன் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்பில் இதுவரை வாய்திறந்தது இல்லை. இவருக்கு நோபல் விருது…

Read More

முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக றிஷாத்: ஜனாதிபதி மைத்திரியுடன் நாளை சந்திப்பு

– ஏ.எச்.எம்.பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான  ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. கடந்த புதன் கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் அசமந்தமான போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக கண்டித்து…

Read More

வெலே சுதாவின் சகோதரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரியை எதிர்வரும் 23  ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை

ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி ஆஷ் கார்ட்டர் தெரிவித்துள்ளார். நேற்று கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்ட்டர், உக்ரைனை ஆக்ரமித்தது, சிரியாவிற்கு படைகளை அனுப்பியது என ரஷ்யா உலகை நாசமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் “ரஷ்யாவுடன் பனிப்போரையோ அல்லது நேரடி போரையோ அமெரிக்கா விரும்பவில்லை. நாங்கள் ரஷ்யாவை எதிரியாக மாற்ற விரும்பவில்லை. அதேசமயம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும்…

Read More

திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

Read More

ராஜினாமா செய்த காரணங்களை கூறுகிறார் திலக் மாரப்பன

ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள் பரிமாறப்படுவதாக அவர் தெரிவித்தார். கடற்படையினர் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தினர், குறித்த ஆயுதக் கப்பலில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை கொண்டு…

Read More

மைத்திரியிடம் ஆலேசனை கேட்ட தாய்லாந்து பிரதமர்

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….

Read More