Headlines

ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் தையல் நிலையம் திறப்பு

றியாஸ் ஆதம் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவணத்தினூடாக அம்பாரை மாவட்டமெங்கும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டடு வருகிறது. பாலமுனை பிரதேசத்திற்கான தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு (2015.05.02) சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாலமுனை அமைப்பாளர் எம்.எம் றிஸ்வான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் பிரதம அதிதியாகவும்…

Read More

பலவசதிகள் இருந்தும் சமுகத்தின் நன்மை கருதியே மகிந்தவை விட்டு வெளியேறினோம் -றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நான் மக்கள் பணி செய்வதற்காக கேட்ட உதவிகளையெல்லாம் தந்தபோதும் சமூகத்தின் நன்மை கருதியே மஹிந்த ராஜபக்ஷவின் அரசிலிருந்து தமது கட்சி வெளியேறியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஐம்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாத் தனது உரையில் மேலும் கூறியதாவது: மஹிந்த அரசிலிருந்து வெளியேறுவதற்கு தாங்கள் எடுத்த…

Read More

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கையின் வேண்டுதலின் படி சகல விளையாட்டுக்கழங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மடு,முசலி பிரதேசத்துக்குரிய நிகழ்வு முசலி பாடசாலை மைதானத்தில் 02/05/2015 அன்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன், அதிதியாக எஹியா பாய்,மாகான பணிப்பாளர் முனவ்வர்,அலிகான் சரீப், கல்விப்பணிப்பாளர் சியான்,இளைஞர் சேவை மன்ற உறுப்பினர் இம்ரான் உற்பட பலர் கலந்து கொண்டனர்

Read More

அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்

Irshad Rahumathulla இந்த நாட்டில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த உரிமைகளுக்கு தடைகள் வருகின்ற போது இதனை வெற்றிக் கொள்ள தமது கட்சியின் தொழிற்சங்கம் எல்லா நேரங்களிலும் செயற்படும் என்றும் கூறினார். தொழிலாளர் தினத்தையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில்…

Read More

சவூதியில் இன்று முதல் டெலிபோன் கட்டணம் 40% குறைகிறது!

சவுதியில் உள்ள உடன்பிறப்புகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி நாளை முதல்( மே-1) தொலைபேசி கட்டணங்கள் குறைகிறது. இதன் படி 40% அழைப்பு கட்டணங்களை குறையும்.இது உள்ளூர் அழைப்பு மற்றும் வெளிநாட்டு அழைப்புகளுக்கு பொருந்தும்.

Read More

புதிய கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் இரு வருடங்களுக்குள் பாவனைக்கு வரும்

கைவிரல் ரேகையை மையப்­ப­டுத்­திய புதிய கடவுச் சீட்டும் இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டையும் அடுத்து வரும் இரு ஆண்­டு­களில் அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் எம்.என்.ரண­சிங்க குறிப்­பிட்டார். இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டைக்­கன வேலைகள் ஏற்­க­னவே ஆட்­ப­திவு திணைக்­க­ளத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் புதிய கடவுச் சீட்டை அறி­முகம் செய்யும் வித­மாக அனைத்து வேலைப்­பா­டு­களும் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். தற்­போ­துள்ள கடவுச் சீட்­டுக்கள் ஊடாக மோச­டிகள் மிக சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் அதனை தடுக்கும்…

Read More

2014 ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு

அஸ்ரப் ஏ சமத்  இலங்கையில் மட்டும் 2014ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2160 சிறுவர்கள் தாக்குதலுக்காகிசித்திரவதை செய்த சம்பவங்களும் சிறுவர் பாதுகபாப்பு அதிகாரசபையின் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது. என இன்றுசிறுவர் பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சர் ரோசிசேனாநாயகக்க இன்றுஅமைச்சில் நடைபெற்றநிகழ்வில் தெரிவித்தார். 2015 ஏப்ரல் 30ஆம் திகதியை நாடு முழுவதிலும் சிறுவர்களது பாலியல் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம்.என்ற திட்டத்தில் சிறுவர் விவகார அமைச்சும் யுனஸ்கோ நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை இலங்கை உள்ள சகல சமுகத்திற்கும் விழிப்பூட்டும்…

Read More

சாரதி அனுமதிப்பத்திரங்கள் சர்வதேச தரத்தில்

முகம்மட் பஹாத் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் சர்வதேச தரத்திலான சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். வியன்னா சர்வதேச பிரகடனத்திற்கு அமைவான போக்குவரத்து விதிகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமும் சர்வதேச தரத்திற்கு உயர்வடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன எனவும் தெரிவித்தார்.

Read More

சவுதி அரேபியாவில் தொழில் புரியும் சகோதரர்களது கவனத்திற்கு..!!

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் தொழில் நிமிர்த்தம் நம் நாட்டு சகோதரர்களில் அதிகமானோர் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றார்கள். இங்கு வசிக்கும் நம் நாட்டு சகோதரர்களின் நிறையப் பேர் அடிக்கடி முகம் கொடுக்கக் கூடிய ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பது கிட்னியில் கல் உண்டாவது, நம் சகோதரர்கள் கூட அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள் “ என்ட வயித்துல கல், கிட்னியில கல் நான் ஊருக்குப் போகனும், ஒப்ரேசன் செய்யனும்” என்று. நமது…

Read More

அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி, விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுகோள்

கடந்த போர்ச் சூழலின் பின்னர் வடக்கில் கைது செய்யப்பட்டு விசாரைணகைள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையிலும்,இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இந்த வேண்டுகோளை தாம் முன் வைத்துள்ளதாக…

Read More

19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு

நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அவர் தமது தகுதி பத்திரத்தையும் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். அதேநேரம் பிரான்ஸ், பஹ்ரெயின், க்ரோஷியா மற்றும் ஹங்கேரி ஆகிய மேலும் நான்கு நாடுகளின் தூதுவர்கள் தங்களின் தகுதி பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

Read More

மேதின கூட்டங்களின் நிமித்தம் போக்குவரத்து ஒழுங்கு மாற்றம்

நாளைய தினம் நடைபெறவுள்ள மே தினத்துக்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் நாளையதினம் 17 மேதினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. சிறிலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் கொழும்பு ஹயிட் பார்க்கில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் பொரெல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் கொழும்பு பீ.ஆர்.சீ மைதானத்திலும், ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டம் கொட்டாஞ்சேனையிலும் நடைபெறவுள்ளன. அதேநேரம்…

Read More