மூழ்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், நடுக்கடலில் எஞ்சிய சாப்பாட்டுக்கான சண்டையில் 100 பேர் வபாத், இஸ்லாமிய நாடுகள் வேடிக்கை பார்ப்பு
கடலில் நிர்க்கதியான புகலிடப் படகில் இருப்பவர்களுக்கிடையே எஞ்சிய உணவுக்காக ஏற்பட்ட சண்டையில் 100 பேர் வரை உயிரிழந்ததாக மூழ்கும் படகொன்றில் இருந்து உயிர் தப்பிய சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கும் படகில் இருந்து மீட்கப்பட்ட மூவர், படகில் இருந்த பலரும் கத்தியால் குத்தப்பட்டோ, தூக்கில் தொங்கவிடப் பட்டோ அல்லது கடலில் வீசி எறியப் பட்டோ கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளனர். மியன்மார், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சுமார் 700 புகலிடக் கோரிக்கை யாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷிய…
