Headlines

மகிந்தவின் ஆட்சியில் சிறுபான்மையினரின் வர்த்தகம் நசுக்கப்பட்டது – ரவி கருநாயக்க

அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் சிறுபான்மை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிறுவனங்களை புதிதாக ஆரம்பிக்கவோ, அல்லது வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் முதலிடவோ மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அதற்குரிய சர்ந்தாப்பங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் திட்டமிட்டு சிறுபான்மையினரின் வர்த்தக நிறுவனங்களை எவ்வாறு மூடவைக்காலாம், அல்லது நஸ்டமாக்கலாம், பற்றவைக்கலாம் பாரிய வரிகளை அவர்கள் மேல் சுமத்தி வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவார்கள். அல்லது சட்டவிரோத வியாபார நிறுவனம், என்ற ரீதியில்…

Read More

றிஷாதை அழிக்க சதி; அம்பலத்திற்கு வரும் ஆதாரங்கள்

எ.எச்.எம்.பூமுதீன்  முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றிவித்துள்ளது. 2012ல் பொதுபலசேனாவின் அராஜகத்துடன் ஆரம்பித்த முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் அட்டூளியங்களும் 2015ல் சிங்கள ராவயவின் மூலம் மேலும் வலுப்பெற்றுவருகின்றது. பொதுபலசேனாவாகட்டும் அல்லது சிங்கள ராவய ஆகட்டும் இவர்களின் ஒரே குறிக்கோள் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக அழிப்பதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இல்லாது…

Read More

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்!

சனாஸ் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டி ஊழியரொருவரின் காலில் ஏறியுள்ளது.இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வண்டிமீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதன்பின்னரே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.காலில் காயபட்ட ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துறைமுகத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக, ஊழியர்கள் தங்களுடைய பைகளைக் கூட கொண்டு செல்லவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….!!!

Read More

இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை விசேட மின் கட்டணம்

குறைந்தளவிலான மின் கட்டண முறைமை இரவு 9.30க்குப் பின்னர் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. மாலை 6 மணிமுதல், இரவு 09 மணிவரை காணப்படும் மின்சாரத்திற்கான மேலதிக கேள்வியை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமென அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் படகொட கூறினார். இதற்கமைய, இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரையான காலப்பகுதியில் விசேட கட்டணத்திற்கு அமைவாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மின்சாரத்திற்கான தேவை காலை 6 மணிமுதல்,…

Read More

சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெறுகின்றது -மாஹிர்

எம்.எம்.ஜபீர் தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெற்று வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இதுவிடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு -03ஆம்  பிரிவிலுள்ள நீண்டகால தேவையாக இருந்த மதீனா உம்மா வீதிக்கு குடிநீர்க் குழாய் பொருத்தப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் பெறக்கூடிய வசதியை  ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு அல்-மபாஸா மகளிர் சங்கம் ஏற்பாடு செய்த நன்றி கூறும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்…

Read More

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுக்கும் என்ற ஆய்வு முடிவு நபிகள் நாயகம் இறைவனின் உண்மைதூதர் என்பதை உறுதி செய்கிறது!

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும் நபிகள் நாயகம் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுத்துள்ளார்கள் அப்படி கொடுக்கவும் கர்பித்துர்ள்ளார்கள் பேரித்தம் பழத்தை பெற்று கொள்ளதவர்கள் சீனி தேன் போன்ற இனிப்பான பொருள்களை தொட்டு பிறந்த குழந்தையின் நாவில் தடவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது நபி வழியில் இருந்து பெறப்பட்ட அறிவாகும் நபிகள் நாயகம் சர்வசாதரணமாக இந்த அறிவை நமக்கு கற்று தந்து சென்றிருக்கிறார்கள் ஆனால்…

Read More

எனது தந்தையும், எனது பரம்பரையிலுள்ளவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் – ஜனாதிபதி மைத்திரி

எனது பரம்பரையிலுள்ளவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம் பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பரம்பரை பரம்பரையாக எனது குடும்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தனக்கு எப்போதும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் கிடையாது எனவும் மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன்…

Read More

அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்?

– ரஸீன் ரஸ்மின் – அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்? தற்போது எல்லோரும் தீரும்பிப் பார்க்கின்ற ஒரு பேசு பொருளாக மாறியிருக்கும் மன்னார் விலிபத்து விவகாரத்தினால் அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் நாளாந்தம் அந்த பகுதிக்கு சென்று வருவதாக அங்கிருக்கும் எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இவ்வாறு நாளுக்கு நாள் மன்னார் முசலிப்பிரதேசத்திற்கு வருகை தருவோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடுவது மாத்திரமின்றி, வில்பத்து வனப்பகுதியையும்…

Read More

கடந்த அரசின் நிதி பதுக்கல் விசாரணை உலக வங்கியிடம் ஒப்படைப்பு -ஜோன் அமரதுங்க

கடந்த அரசாங்கத்தின் பிரமுகர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பாரிய அளவில் பணத்தை பதுக்கிவைத்துள்ள விதம் தொடர்பாக பொது சமாதான மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளிப்படுத்தியுள்ளார். கம்பஹா – திவுலப்பிட்டி கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இவ்வாறான முறையற்ற நிதி வைப்பீடுகள் தொடர்பிலான சர்வதேச ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான பொறுப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

Read More

அமைச்சர் றிஷாதின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் நீதியமைச்சர்

– அஸ்ரப் ஏ சமத் – 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவறிய வாக்காளர்களை மீண்டும் தேர்தல் இடாப்பில் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைகொண்டுவரதுரிதநடவடிக்கைமேற்கொள்ளப்படுகின்றது. அ.இ.ம.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனீன் வேண்டுகோழுக் கிணங்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதற்கான நடவடிக்கையை மேற்கெண்டுள்ளார். கடந்த  சில தினங்களுக்குமுன்னர் நீதியமைசசர் ராஜபக்சவை அமைச்சர் றிசாத்பதியுத்தீன் சந்தித்து இந்தவிடயத்தை சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பானஅவசரநடவடிக்கைஎடுக்குமாறு கோறியிருந்தார். அமைச்சர் றிசாத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் ராஜபக்ச…

Read More

இலங்கை தொடர்பில் ஐ.நா சபையில் விசேட அறிக்கை

இலங்கையின் கடந்த வருட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உரிமை தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா கிரேபியோ இந்த கருத்தை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் 29வது கூட்டம் ஜூன் 13ம் திகதி தொடக்கம் ஜூலை 3ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதன்போது பிரான்சுவா கிரேபியோ இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்பித்து உரையாற்றவுள்ளார். அவரது…

Read More

177, 224/1 தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வீதி இலக்கம் 177 கடுவல – கொள்ளுபிட்டி மற்றும் வீதி இலக்கம் 224/1 கடுவல கம்பஹா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையற்ற வகையில் வீதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் சில வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக கெமுனு குறிப்பிட்டார்.

Read More